பசறை - லுணுகலை ஹொப்டன் - யப்பாம தனியார் தோட்டத்தில் தொழிலுக்கு சென்ற நபர் ஒருவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளவிக்கொட்டுக்கு இலக்கான குறித்த நபர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் லுணுகலை - ஹொப்டன் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.