யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் யாழில் உள்ள இந்திய துணை தூதுவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளதாக
கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதி அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.
குறிப்பாக
இந்திய மீனவர்கள் அத்துமீறல் மற்றும் இலங்கை கடற்பரப்பில்
மேற்கொள்ளப்படும் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள் மற்றும் சீன கடலட்டைப்
பண்ணை விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இதன் போது கருத்து
தெரிவித்துள்ளார்