கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் செயற்கை கடற்கரை ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கை கடற்கரை, நாட்டு மக்களையும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் கவரும் வகையில் பல வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
குறித்த இந்த இந்த கடற்கரை சுமார் மூன்றரை கிலோமீட்டர் நீளம் கொண்டுள்ளது.
அத்துடன் செயற்கைக் கடற்கரையில் நீந்த முடியும் என்பதுடன் நீர் விளையாட்டிலும் ஈடுபடலாம்.
மேலும் இந்த செயற்கை கடற்கரைக்கு மேலதிகமாக அதற்கு அருகில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உணவுகளுடன் கூடிய உணவு விற்பனை வளாகமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.