இந்தியாவின் குடியரசு தின நிகழ்வு நாளை மறுதினம் வியாழக்கிழமை மாலை6 மணிக்கு யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கு அருகிலுள்ள கலாசார மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளது.
அதேவேளை கலாசார மத்திய நிலையம் எதிர்வரும் 11ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால், இலங்கையின் சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வின்போது கையளிக்கப்படவுள்ளது.
அதற்கு முன்னதாகவே இந்தியக் குடியரசு தின நிகழ்வு அங்கு இடம்பெறவுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் அமைக்கப்பட்ட மேற்படி கலாசார நிலையம் கடந்த ஓகஸ்ட் மாதம் இந்தியாவின் சுதந்திர தினமன்று சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டதுடன், இந்தியாவின் சுதந்திர தின நிகழ்வுக் கொண்டாட்டங்களும் அங்கு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் விஜயத்திற்கு முன்பதாக யாழில் இடம்பெறவுள்ள முக்கிய நிகழ்வு இந்தியாவின் குடியரசு தின நிகழ்வு நாளை மறுதினம் வியாழக்கிழமை மாலை6 மணிக்கு யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கு அருகிலுள்ள கலாசார மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளது.அதேவேளை கலாசார மத்திய நிலையம் எதிர்வரும் 11ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால், இலங்கையின் சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வின்போது கையளிக்கப்படவுள்ளது. அதற்கு முன்னதாகவே இந்தியக் குடியரசு தின நிகழ்வு அங்கு இடம்பெறவுள்ளது.இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் அமைக்கப்பட்ட மேற்படி கலாசார நிலையம் கடந்த ஓகஸ்ட் மாதம் இந்தியாவின் சுதந்திர தினமன்று சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டதுடன், இந்தியாவின் சுதந்திர தின நிகழ்வுக் கொண்டாட்டங்களும் அங்கு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.