• May 07 2024

குடித்துவிட்டு தகராறு - சகோதரியின் கணவரால் நபர் ஒருவர் கொடூரமாக கொலை..! இலங்கையில் பயங்கரம்

Chithra / Jan 22nd 2024, 10:48 am
image

Advertisement



தெஹியோவிட்ட, திகல பிரதேசத்தில் ஒருவர் கோடரி மற்றும் கல்லால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

இக்கொலை நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர் திகல, தெஹியோவிட்ட பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இறந்தவர் குடித்துவிட்டு வந்து தனது சகோதரியுடன் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார்.

பின்னர், அவரது கணவர் வந்து கோடாரி மற்றும் கல்லால் குறித்த நபரை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

43 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தெஹியோவிட்ட பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குடித்துவிட்டு தகராறு - சகோதரியின் கணவரால் நபர் ஒருவர் கொடூரமாக கொலை. இலங்கையில் பயங்கரம் தெஹியோவிட்ட, திகல பிரதேசத்தில் ஒருவர் கோடரி மற்றும் கல்லால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.இக்கொலை நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர் திகல, தெஹியோவிட்ட பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.இறந்தவர் குடித்துவிட்டு வந்து தனது சகோதரியுடன் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார்.பின்னர், அவரது கணவர் வந்து கோடாரி மற்றும் கல்லால் குறித்த நபரை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.43 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தெஹியோவிட்ட பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement