• Apr 27 2025

60 அடி கம்பத்தில் இருந்து விழுந்து மரணித்த நபர்! பொன்னர் சங்கர் கூத்தின்போது நடந்த துயரம்

Chithra / Apr 27th 2025, 2:10 pm
image

 

நானு ஓயா பகுதியில் இடம்பெற்ற பொன்னர் சங்கர் வரலாற்று நாடகத்தில் கம்ப மரம் ஏறும் போது தவறி விழுந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். 

நானு ஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளாசோ தோட்ட பகுதியில், இன்று(27) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுமார் 60 அடி உயரம் கொண்ட  மரத்தில் இருந்து குறித்த நபர் தவறி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


நானு ஓயா - கிளாசோ தோட்டத்தைச் சேர்ந்த 63 வயதுடைய முருகன் சதாசிவம் என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளார். 

இவர் பொன்னர் சங்கர் வரலாற்று கூத்து நாடகத்தில் பெரிய அண்ணன் என்ற கதாபாத்திரத்தில் வேடமிட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றையதினம் இரவு ஆரம்பிக்கப்பட் பொன்னர் சங்கர் வரலாற்று நாடகம் இன்று அதிகாலை வரை தொடர்ந்துள்ளது. 

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானு ஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

60 அடி கம்பத்தில் இருந்து விழுந்து மரணித்த நபர் பொன்னர் சங்கர் கூத்தின்போது நடந்த துயரம்  நானு ஓயா பகுதியில் இடம்பெற்ற பொன்னர் சங்கர் வரலாற்று நாடகத்தில் கம்ப மரம் ஏறும் போது தவறி விழுந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். நானு ஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளாசோ தோட்ட பகுதியில், இன்று(27) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சுமார் 60 அடி உயரம் கொண்ட  மரத்தில் இருந்து குறித்த நபர் தவறி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நானு ஓயா - கிளாசோ தோட்டத்தைச் சேர்ந்த 63 வயதுடைய முருகன் சதாசிவம் என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளார். இவர் பொன்னர் சங்கர் வரலாற்று கூத்து நாடகத்தில் பெரிய அண்ணன் என்ற கதாபாத்திரத்தில் வேடமிட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.நேற்றையதினம் இரவு ஆரம்பிக்கப்பட் பொன்னர் சங்கர் வரலாற்று நாடகம் இன்று அதிகாலை வரை தொடர்ந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானு ஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement