ஹட்டன் பகுதியில் அனுமதிப்பத்திரத்தின் நிபந்தனைகளை மீறி மணல் கொண்டு சென்ற நபரொருவர் லொறியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹட்டன் பொலிஸாரினால் இவர் 26.04.2023 அன்று மாலை ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மணலை அனுமதி பத்திரத்தின் நிபந்தனைகளை மீறி (அனுமதிப்பத்திரத்தில் திகதி தெளிவாக குறிப்பிடவில்லை) கித்துல்கல பகுதியிலிருந்து நோர்வூட் பகுதிக்கு கொண்டு செல்லும் போது பொலிஸாரினால் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் பிணையில் விடுதலை செய்ததுடன், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.