அயலகத் தமிழர் தின விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று ஆரம்பமானது.
தமிழக அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை 3-ம் ஆண்டாக ‘தமிழ் வெல்லும்’ என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு மாபெரும் அயலகத் தமிழர் தின விழாவை சென்னையில் நடத்துகிறது.
இந்நிலையில் இன்றைய தொடக்க விழாவில், தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. மற்றும் துறைசார் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.