• May 20 2024

பல வழக்குகள் நிலுவையில்..! பதில் பொலிஸ்மா அதிபர் மீது நம்பிக்கை இல்லை - சட்டத்தரணிகள் கூட்டமைப்பு அதிருப்தி

Chithra / Dec 18th 2023, 12:09 pm
image

Advertisement

 

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவர் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டமை குறித்து இலங்கை சட்டத்தரணிகளின் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரை சித்திரவதை செய்ததாக உயர் நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில், தேசபந்து தென்னகோனை பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை எவ்வாறு அனுமதி வழங்கியது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் உபுல் ஜயசூரிய கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான சில வழக்குகள் நிலுவையில் இருப்பதன் காரணமாக, அவர் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

பல வழக்குகள் நிலுவையில். பதில் பொலிஸ்மா அதிபர் மீது நம்பிக்கை இல்லை - சட்டத்தரணிகள் கூட்டமைப்பு அதிருப்தி  சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவர் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டமை குறித்து இலங்கை சட்டத்தரணிகளின் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரை சித்திரவதை செய்ததாக உயர் நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளது.இந்தநிலையில், தேசபந்து தென்னகோனை பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை எவ்வாறு அனுமதி வழங்கியது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் உபுல் ஜயசூரிய கேள்வி எழுப்பியுள்ளார்.தேசபந்து தென்னகோனுக்கு எதிரான சில வழக்குகள் நிலுவையில் இருப்பதன் காரணமாக, அவர் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement