சிவசேனை அமைப்பின் தலைவர் கலாநிதி மறவன் புலவு சச்சிதானந்தன், தமிழுக்கும் சைவத்திற்கு ஆற்றி வரும் பணியைக் கெளரவிக்கும் விதமாக மன்னார் இந்து மக்களால் நேற்றைய தினம் ‘தமிழினக் காவலன்’ விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
மன்னார் எழுத்தூர் செல்வநகர் அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற இவ்விழாவில் அவருக்கு செங்கோலொன்றும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிவசேனை அமைப்பினர், உலக சைவ மகா சபையினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.