திருகோணமலை கோணேஸ்வரம் கோவிலிலிருந்து சல்லி அம்மன் கோவில் வரையிலான
(திருகோணமலை - சல்லி) 8 கிலோமீட்டர் தூரத்தினை நீந்தி கடக்கும் முயற்சியில்
இப்போட்டி நடாத்தப்பட்டது. காலை 11.30 மணிக்கு ஆரம்பமான இப்போட்டி மாலை 5
மணி அளவில் நிறைவடைந்தது.
இந்த நீச்சல் போட்டியை
Trinco Aid சிறந்த முறையில் நடத்துவதற்காக Manju Nishshanka - The Leader
of Global Srilankan Congress அவர்கள் தாமாக முன்வந்து நிதி உதவி
வழங்கியுள்ளார்.
கடல் வழி நீச்சல் போட்டியில் 21 சிறுவர்கள் பங்குபற்றினர்.
நிதிஷ், வருன், கோபிசன், இன்ஹாஸ், சந்துரு,
விடேஸ்வர், உதேஸ், தன்வந், ஷிமர், அனிஷ், அனுஜ, கெவின், ஷஸ்விந்த்,
ரெக்ஸ்டன், ருக்ஷன், நிரங்க, ரஷ்மிகா, கருண்யா, டிலுக்ஸன், ஃம்ஸான்,
கபிஷன் ஆகியோரே பங்குபற்றினர்.
இப்போட்டியில் T/St.Joseph's College, T/R.K.M Hindu
College, T/St. Mary's College, T/Orshill Vivekananda College,
T/Selvanayagapuram Hindu Maha Vithyalayam, GreenWich International
College, T/Sinhala Maha Vidyalaya போன்ற பாடசாலையில் கல்வி கற்கும் மாணவ
மாணவிகள் பங்குபற்றினர்.
போட்டியின் தூரத்தினை
தன்வந், ரஷ்மிகா, ஷிமர், நிரங்க, விடேஸ்வர், ஷஸ்விந்த் ஆகிய ஆறு
சிறுவர்கள் முழுமையாக கடந்து சாதனை படைத்தனர். மற்றும் சிலர் தங்களால்
நீந்த முடிந்த தூரத்தினை அடைந்து தங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்தர்.
இப்போட்டியில்
ஷஸ்விந்த் (T/Orshill Vivekananda College) முதலாம் இடத்தையும், ஷிமர்
(Greenwish International College) இரண்டாம் இடத்தையும், தன்வந் (T/R.K.M
Hindu College) மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர். இவர்களுக்கான
வெற்றிக் கேடயங்களும், பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ்களும்
வழங்கப்பட்டன. முதல் இடத்தை பெற்ற நீச்சல் வீரருக்கான கேடயத்தினை சித்திரவேலாயுதம் வீரசுதாகரன் (செயலாளர், வாகரை பிரதேச செயலகம்) அவர்களும்,
இரண்டாவது நீச்சல் வீரருக்கான கேடயத்தினை நந்தன விஜயலால் (Yana
Foundation Director) அவர்களும், மூன்றாவது நீச்சல் வீரருக்கான கேடயத்தினை
திருமதி. தயாளினி ஹரிஹரன் (Director of Trinco Aid) மற்றும் செல்வேந்திரன் (Director of Guna Institution) ஆகியோரால்
வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில்
Tinco Aid சார்பில் பணிப்பாளர் திருமதி. தயாளினி ஹரிகரன், நிறுவனர் இராஜக்கோன் ஹரிகரன், நிகழ்ச்சி முகாமையாளர் சங்கரலிங்கம் நவநீதன்
ஆகியோரும் நந்தன விஜயலால் (Yana Foundation Director),
பயிற்சியாளர்கள், Trinco Blue Water Sports, பெற்றோர்கள், தன்னார்வலர்கள்,
படகு உதவியாளர், கிராம மக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.