மஸ்கெலியா நோட்டன் ,நோட்டன்,கினிகத்தேன பகுதியில் உள்ள தியகல சந்தியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் பாரிய மண் திட்டு சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் கினிகத்தேன கொழும்பு வழியாக ஹட்டன் மஸ்கெலியா நோட்டன் வரும் வாகனங்கள் தற்போது மாற்று வழியை பயன் படுத்துமாறு கினிகத்தேன பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அந்த பகுதியில் காலை 10.30 மணியளவில் பெய்த மழையால் இந்த மண் திட்டு சரிவு ஏற்பட்டு உள்ளது.
இப் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேலும் மண் சரிவுகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
சரிந்த மண் திட்டை அகற்ற நோர்வூட் பிரதேச வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.