இன்று 02.10.2023.காலை 6.மணியலவில் மஸ்கெலியா நோட்டன் வீதியில் கிரிவன்நெலிய பகுதியில் வீதி அருகில் இருந்த மரம் சாய்ந்ததால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டது என நோட்டன் பொலிசார் தெரிவித்தனர்.
இது குறித்து நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கருத்து தெரிவிக்கையில் அதிகாலை வேளையில் கனத்த மழையுடன் கூடிய காற்று வீசியதால் இம் மரம் சாய்ந்து உள்ளது.
இம் மரத்தை நோட்டன் பொலிசார் மற்றும் அப் பகுதியில் உள்ள மக்கள் நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் இணைந்து அகற்றியுள்ளனர்.
இதணை தொடர்ந்து இந்த வீதியில் போக்குவரத்து தடை நீக்கப்பட்டது.