ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி திருமதி அசுசா குபோடாவிற்கும் (Azusa Kubota) இடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது.
இதன்போது அரசாங்கக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கும், பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் இளைஞர்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கும் UNDP இன் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.