• Apr 16 2025

தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மிரட்டும் அமைச்சர்கள் ..!

Sharmi / Apr 16th 2025, 1:28 pm
image

எதிர்வரும் உள்ளூராட்சி  சபைத் தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறும் அவ்வாறு செய்யாவிட்டால் ஒதுக்கப்பட்ட நிதியை கையாள்வதில் தடைகள் ஏற்படுமென மிரட்டல் தொணியில் அமைச்சர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கை மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மன்னாரில் நேற்று நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய சுற்றாடல் அமைச்சர் இந்த வருடம் பாதீட்டில் இதுவரை எந்த அரசாங்கங்களும் செய்யாத அளவிற்கு வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக நிதியொதுக்கியுள்ளோம்.

தேசிய மக்கள் சக்திஅனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் இந்த நிதியைமுறையாக அபிவிருத்தி பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் கைப்பற்ற வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் இந்த நிதியை செலவளிப்பதில் தடைகள். ஆகவே மக்கள் தேசிய மக்கள் சக்தி வேட்பாளருக்கு வாக்களிக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இது மிகமோசமான பிரச்சாரயுக்தியாகும், ஒரு நாட்டின் அரசாங்கத்தினால் மாகாணங்களின்அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கீடு செய்வது ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் கடமையாகும். அதனைஅவர்கள் தவிர்க்கமுடியாது.

வடக்கு மாகாணம் இலங்கையில்தான் அமைந்துள்ளது. வடக்குமாகாணம் நான் அறிந்தவரையில் தனிநாடல்ல, அப்படிப்பார்த்தால் கடந்த 30வருடங்களாக நடைபெற்ற கொடிய யுத்தத்தினால் உட்கட்டுமானங்கள் நீண்டகாலமாக அபிவிருத்தி செய்யப்படவில்லை. அங்குள்ள மக்களின் தேவைகள் நாட்டின் ஏனைய மாகாணங்களில் வாழுகின்ற மக்களின் தேவையைவிட வேறுபட்டது.

ஆகவே வடக்கு மாகாணத்திற்கு விசேடமாக அதிக நிதி ஒதுக்கீடுகளை இந்த அரசாங்கம் செய்திருக்கவேண்டும், ஆனால் அவ்வாறு நிதியொதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை.

இந்த நிலையில் உங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளோம் அதனை முறையாக பயன்படுத்த நாங்கள் மட்டுமே நீங்கள் வாக்களிக்கவேண்டும் என்று கூறுவதன் அர்த்தம் நீங்கள் வேறு யாருக்காவது வாக்களித்தால் அந்த நிதியை நாங்கள் விடுவிக்கமாட்டோம் என்றே அர்த்தப்படவேண்டியுள்ளது.

மத்திய அரசினால் மாகாணங்களின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியானது இந்த நாட்டின்அனைத்து பிரஜைகளுக்கு சொந்தமானது. அதனை அனுபவிக்க அனைத்து மக்களுக்கும் உரிமையுள்ளது.

அதுவே ஜனநாயகம் பாதீட்டு நிதி என்பது தேசிய மக்கள் சக்தியின் கட்சி நிதியோ சனாதிபதியின் சொந்த நிதியோ அல்ல. இந்த நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்து பெறப்படுகின்ற நிதியாகும்.

எனவே இவ்வாறான மிரட்டும் தோனியிலான பாணியில் தேர்தல் பிரச்சாரம் செய்வதை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அமைச்சரின் மிரட்டலுக்கு சரியான பதிலை எதிர்வரும் தேர்தலில் வாக்குப்பதிவு செய்வதால் தமிழ்மக்கள் காட்டுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மிரட்டும் அமைச்சர்கள் . எதிர்வரும் உள்ளூராட்சி  சபைத் தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறும் அவ்வாறு செய்யாவிட்டால் ஒதுக்கப்பட்ட நிதியை கையாள்வதில் தடைகள் ஏற்படுமென மிரட்டல் தொணியில் அமைச்சர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கை மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,மன்னாரில் நேற்று நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய சுற்றாடல் அமைச்சர் இந்த வருடம் பாதீட்டில் இதுவரை எந்த அரசாங்கங்களும் செய்யாத அளவிற்கு வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக நிதியொதுக்கியுள்ளோம்.தேசிய மக்கள் சக்திஅனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் இந்த நிதியைமுறையாக அபிவிருத்தி பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் கைப்பற்ற வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இந்த நிதியை செலவளிப்பதில் தடைகள். ஆகவே மக்கள் தேசிய மக்கள் சக்தி வேட்பாளருக்கு வாக்களிக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தார்.இது மிகமோசமான பிரச்சாரயுக்தியாகும், ஒரு நாட்டின் அரசாங்கத்தினால் மாகாணங்களின்அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கீடு செய்வது ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் கடமையாகும். அதனைஅவர்கள் தவிர்க்கமுடியாது.வடக்கு மாகாணம் இலங்கையில்தான் அமைந்துள்ளது. வடக்குமாகாணம் நான் அறிந்தவரையில் தனிநாடல்ல, அப்படிப்பார்த்தால் கடந்த 30வருடங்களாக நடைபெற்ற கொடிய யுத்தத்தினால் உட்கட்டுமானங்கள் நீண்டகாலமாக அபிவிருத்தி செய்யப்படவில்லை. அங்குள்ள மக்களின் தேவைகள் நாட்டின் ஏனைய மாகாணங்களில் வாழுகின்ற மக்களின் தேவையைவிட வேறுபட்டது.ஆகவே வடக்கு மாகாணத்திற்கு விசேடமாக அதிக நிதி ஒதுக்கீடுகளை இந்த அரசாங்கம் செய்திருக்கவேண்டும், ஆனால் அவ்வாறு நிதியொதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை. இந்த நிலையில் உங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளோம் அதனை முறையாக பயன்படுத்த நாங்கள் மட்டுமே நீங்கள் வாக்களிக்கவேண்டும் என்று கூறுவதன் அர்த்தம் நீங்கள் வேறு யாருக்காவது வாக்களித்தால் அந்த நிதியை நாங்கள் விடுவிக்கமாட்டோம் என்றே அர்த்தப்படவேண்டியுள்ளது.மத்திய அரசினால் மாகாணங்களின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியானது இந்த நாட்டின்அனைத்து பிரஜைகளுக்கு சொந்தமானது. அதனை அனுபவிக்க அனைத்து மக்களுக்கும் உரிமையுள்ளது. அதுவே ஜனநாயகம் பாதீட்டு நிதி என்பது தேசிய மக்கள் சக்தியின் கட்சி நிதியோ சனாதிபதியின் சொந்த நிதியோ அல்ல. இந்த நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்து பெறப்படுகின்ற நிதியாகும்.எனவே இவ்வாறான மிரட்டும் தோனியிலான பாணியில் தேர்தல் பிரச்சாரம் செய்வதை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அமைச்சரின் மிரட்டலுக்கு சரியான பதிலை எதிர்வரும் தேர்தலில் வாக்குப்பதிவு செய்வதால் தமிழ்மக்கள் காட்டுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement