• May 20 2024

அத்துமீறி நுழைந்து வீட்டை உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்கள்! வவுனியாவில் சம்பவம் samugammedia

Chithra / May 29th 2023, 6:59 pm
image

Advertisement

வவுனியா - மரக்காரம்பளை பகுதியில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் நெளுக்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

வவுனியா மரக்காரம்பளை பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் இன்று அதிகாலை உள்நுளைந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பிரதான வாயிலை உடைத்து சேதப்படுத்தியதுடன், கதவுகள், யன்னல்களையும் அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

குறித்த வீட்டில், உரிமையாளர்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உரிமையாளர்கள் இன்று காலை வீடு திரும்பிய போது உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.


சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் நெளுக்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

வீட்டிற்கு அருகில் உள்ள கண்காணிப்பு கமராவில் தாக்குதல் மேற்கொண்ட நபர்கள் தொடர்பான காட்சிகள் பதிவாகியுள்ள நிலையில், காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துமீறி நுழைந்து வீட்டை உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்கள் வவுனியாவில் சம்பவம் samugammedia வவுனியா - மரக்காரம்பளை பகுதியில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் நெளுக்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.வவுனியா மரக்காரம்பளை பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் இன்று அதிகாலை உள்நுளைந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பிரதான வாயிலை உடைத்து சேதப்படுத்தியதுடன், கதவுகள், யன்னல்களையும் அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.குறித்த வீட்டில், உரிமையாளர்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.உரிமையாளர்கள் இன்று காலை வீடு திரும்பிய போது உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் நெளுக்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.வீட்டிற்கு அருகில் உள்ள கண்காணிப்பு கமராவில் தாக்குதல் மேற்கொண்ட நபர்கள் தொடர்பான காட்சிகள் பதிவாகியுள்ள நிலையில், காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement