நிட்டடம்புவ நகரில் தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரம் இனந்தெரியாத நபர்களால் நேற்றிரவு உடைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பணப்பரிமாற்ற இயந்திரத்திலிருந்த 7,851,000 ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அருகிலிருந்த CCTV கெமரா காட்சிகளின் உதவியுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பல குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருதாகவும் நிட்டம்புவ காவல் துறையினர் தெரிவித்தனர்