மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
இதற்கமைய 1,037 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 1,204 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 721 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
நள்ளிரவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.