கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால்
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம்
முன்பாக இடம்பெற்றது.
இதன்போது முள்ளிவாய்க்கால் நினைவாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் தயாரிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி கோவில் முன்றலில் வைத்து வழங்கப்பட்டது.