• May 01 2024

யாழில் வீடொன்றில் புகுந்து மர்மநபர்கள் அட்டகாசம்...! நாசமான சொத்துக்கள்....!

Sharmi / Apr 11th 2024, 10:07 am
image

Advertisement

யாழில் வீடொன்றுக்குள் புகுந்த மர்ம நபர்களால் வீட்டில் இருந்த உடைமைகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம்(09)  இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் உள்ள வீடொன்றும், அந்த வீட்டில் இருந்த உடைமைகளும் வன்முறை கும்பலொன்றால் நேற்றுமுன்தினம் அடித்துடைக்கப்பட்டுள்ளது.

வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் கண்ணாடிகள் அடித்துடைக்கப்பட்டதுடன், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும்  எரியூட்டப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


யாழில் வீடொன்றில் புகுந்து மர்மநபர்கள் அட்டகாசம். நாசமான சொத்துக்கள். யாழில் வீடொன்றுக்குள் புகுந்த மர்ம நபர்களால் வீட்டில் இருந்த உடைமைகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம்(09)  இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் உள்ள வீடொன்றும், அந்த வீட்டில் இருந்த உடைமைகளும் வன்முறை கும்பலொன்றால் நேற்றுமுன்தினம் அடித்துடைக்கப்பட்டுள்ளது.வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் கண்ணாடிகள் அடித்துடைக்கப்பட்டதுடன், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும்  எரியூட்டப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement