நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழாவில் பக்தர்களின் நகைகள் மற்றும் தொலைபேசி உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா நேற்றையதினம் இலட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோசத்துக்கு மத்தியில் இடம்பெற்றது.
இந்நிலையில் நல்லூர் ஆலய சூழலில் கடும் சனநெரிசல் ஏற்பட்ட நிலையில் இதனை சாதகமாக பயன்படுத்தி திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளனர்.
அந்தவகையில் ஆலயத்திற்கு வருகை தந்த 8பேரின் சுமார் 15பவுண் நகை களவு போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் மேலும் 6 பேரின் தொலைபேசிகளும் அபகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.