• Jun 01 2024

தேர்தலுக்காக மாபெரும் கூட்டணி: இணையப்போகும் ரணில் மற்றும் மகிந்த! samugammedia

Chithra / Sep 14th 2023, 10:30 am
image

Advertisement

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை அடுத்த தேர்தலுக்கு முன்னதாக ஒரு மாபெரும் கூட்டணியை அமைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கூட்டணி தொடர்பிலான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்த பேச்சுக்கள் நாட்டை ஆள்வதற்கான பொதுவான கொள்கை மற்றும் கட்டமைப்பிற்கு உடன்பட முயற்சிப்பதும் உள்ளடங்குவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கைக்கு பெரும்பான்மை ஒருமித்த கருத்து உள்ளதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. என்றாலும், அடுத்த தேர்தலில் இரு தரப்பினரும் வெற்றிபெற ஒரே வழி கூட்டணியில் இணைந்து செயல்படுவதுதான் என்பதில் இரு தரப்பினரும் உடன்பட்டுள்ளனர்.

இதேவேளை, 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் நிறுவுனர் பசில் ராஜபக்சவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் அண்மையில் ஒரு பேச்சு வார்த்தை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் அடுத்து வரும் அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் விக்ரமசிங்க போட்டியிடும் நிகழ்வில் பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச என்ன பங்கு வகிக்கிறார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

தேர்தலுக்காக மாபெரும் கூட்டணி: இணையப்போகும் ரணில் மற்றும் மகிந்த samugammedia  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை அடுத்த தேர்தலுக்கு முன்னதாக ஒரு மாபெரும் கூட்டணியை அமைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த கூட்டணி தொடர்பிலான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்த பேச்சுக்கள் நாட்டை ஆள்வதற்கான பொதுவான கொள்கை மற்றும் கட்டமைப்பிற்கு உடன்பட முயற்சிப்பதும் உள்ளடங்குவதாகவும் கூறப்படுகிறது.இந்த நடவடிக்கைக்கு பெரும்பான்மை ஒருமித்த கருத்து உள்ளதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. என்றாலும், அடுத்த தேர்தலில் இரு தரப்பினரும் வெற்றிபெற ஒரே வழி கூட்டணியில் இணைந்து செயல்படுவதுதான் என்பதில் இரு தரப்பினரும் உடன்பட்டுள்ளனர்.இதேவேளை, 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் நிறுவுனர் பசில் ராஜபக்சவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் அண்மையில் ஒரு பேச்சு வார்த்தை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.இந்தநிலையில் அடுத்து வரும் அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.எனினும் விக்ரமசிங்க போட்டியிடும் நிகழ்வில் பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச என்ன பங்கு வகிக்கிறார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

Advertisement

Advertisement

Advertisement