வவுனியா மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சியில் நாமல் ராஜபச்சாவின் நேரடி தொடர்பாட்டாளராக கடந்த காலங்களில் செயற்பட்ட எஸ்.நிரோஸ்குமார் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து வவுனியா மாவட்ட அமைப்பாளராக செயற்படுவதற்கு அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசாவினால் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் ஆரம்ப நிகழ்வும் வவுனியா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரமுகர்களுக்கு இடையிலான கலந்துரையாடலும் (16.12) முன்னாள் அமைப்பாளர் கருணதாசாவின் இல்லத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்கள் வவுனியாவில் கட்சியின் எதிர்கால திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடியுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.