தேசிய சுகாதார நல கண்காட்சி யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் போது மங்கள வாத்தியங்களுடன் விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்த தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கண்காட்சி கூடத்தை நாடாவெட்டி திறந்து வைத்தார்.
இந் நிகழ்வில் சுகாதார அமைச்சு அதிகாரிகள், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சத்தியமூர்த்தி, யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் மற்றும் யாழிலுள்ள இந்திய துணைத் தூதரக துணைத் தூதுவர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.