எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவு முதல் 21ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை கண்டிக்கும் மாத்தளைக்கும் இடையிலான புகையிரத சேவை இடைநிறுத்தப்பட உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி,
கண்டிக்கும் கட்டுகஸ்தோட்டைக்கும் இடையில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளுக்காக புகையிரத சேவை நிறுத்தப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கண்டிக்கும் மாத்தளைக்கும் இடையில் நாளொன்றுக்கு சுமார் 12 புகையிரதங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.