வடகொரியா, கண்டம் விட்டு கண்டம் பாயும் இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
வடகொரியா அவ்வப்போது அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, வடகொரியாவில் இருந்து 2 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு ஏவுகணைகளும் கொரிய தீபகற்பத்திற்கும், ஜப்பானுக்கும் இடையே உள்ள கடற்பரப்பில் விழுந்துள்ளததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ஜப்பான் பிராந்தியம் மற்றும் சர்வதேச சமூகத்தின் பாதுகாப்பிற்கு வடகொரியா அச்சுறுத்தலாக உள்ளதாக ஜப்பான் பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் டோஷிரோ இனோ குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜப்பான் மீது வடகொரியா ஏவுகணை தாக்குதல் வடகொரியா, கண்டம் விட்டு கண்டம் பாயும் இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.வடகொரியா அவ்வப்போது அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வடகொரியாவில் இருந்து 2 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த இரண்டு ஏவுகணைகளும் கொரிய தீபகற்பத்திற்கும், ஜப்பானுக்கும் இடையே உள்ள கடற்பரப்பில் விழுந்துள்ளததாக கூறப்படுகிறது.இதையடுத்து, ஜப்பான் பிராந்தியம் மற்றும் சர்வதேச சமூகத்தின் பாதுகாப்பிற்கு வடகொரியா அச்சுறுத்தலாக உள்ளதாக ஜப்பான் பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் டோஷிரோ இனோ குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.