• Oct 19 2024

அதிகாரிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு தேவை..! - பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் samugammedia

Chithra / May 14th 2023, 11:39 am
image

Advertisement

வர்த்தக நிலையங்களை பரிசோதனை செய்வதற்காக செல்லுகின்ற அதிகாரிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவேண்டுமென நுகர்வோர் அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளர் பிரியந்த விஜேசிங்க கடிதம் அனுப்பியுள்ளார்.

சோதனைக்கு செல்லுகின்ற நுகர்வோர் அதிகாரசபையின் அதிகாரிகளை தாக்கி கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக அதிகளவான வர்த்தக நிலையங்களில் முட்டைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டே விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தமது அதிகாரிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குருநாகல் பகுதியில் சுற்றிவளைப்புக்கு சென்ற தமது அதிகாரிகள் எட்டு பேர் தாக்குதல் காரணமாக காயமடைந்துள்ளதாகவும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


அதிகாரிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு தேவை. - பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் samugammedia வர்த்தக நிலையங்களை பரிசோதனை செய்வதற்காக செல்லுகின்ற அதிகாரிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவேண்டுமென நுகர்வோர் அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளர் பிரியந்த விஜேசிங்க கடிதம் அனுப்பியுள்ளார்.சோதனைக்கு செல்லுகின்ற நுகர்வோர் அதிகாரசபையின் அதிகாரிகளை தாக்கி கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.குறிப்பாக அதிகளவான வர்த்தக நிலையங்களில் முட்டைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டே விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் தமது அதிகாரிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.குருநாகல் பகுதியில் சுற்றிவளைப்புக்கு சென்ற தமது அதிகாரிகள் எட்டு பேர் தாக்குதல் காரணமாக காயமடைந்துள்ளதாகவும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement