இலங்கையின் அதிபர் தேர்தல் தொடர்பில் எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் அல்லது ஓகஸ்ட் மாத தொடக்கத்தில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என சுயாதீன தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்குமிடையில் தேர்தல் இடம்பெறக் கூடும் என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போதைய தேர்தல் சட்டமே தேர்தல் நடைமுறையை நிர்வகிக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் அதிபர் தேர்தலுக்கு 2024ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்படும்.
வாக்காளர்களைப் பதிவு செய்யும் பணி தற்போது நடைபெற்று வரும் நிலையில், ஜூலை மாதத்துக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டார்.
இந்த நிலையில் எதிர்வரும் அதிபர் தேர்தலுக்கான செலவு 10 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதிபர் தேர்தல் குறித்து வெளிவரவுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பு. இலங்கையின் அதிபர் தேர்தல் தொடர்பில் எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் அல்லது ஓகஸ்ட் மாத தொடக்கத்தில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என சுயாதீன தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்குமிடையில் தேர்தல் இடம்பெறக் கூடும் என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.அத்துடன் தற்போதைய தேர்தல் சட்டமே தேர்தல் நடைமுறையை நிர்வகிக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை எதிர்வரும் அதிபர் தேர்தலுக்கு 2024ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்படும்.வாக்காளர்களைப் பதிவு செய்யும் பணி தற்போது நடைபெற்று வரும் நிலையில், ஜூலை மாதத்துக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டார்.இந்த நிலையில் எதிர்வரும் அதிபர் தேர்தலுக்கான செலவு 10 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.