தென்னிந்திய திரையுலகில் கடந்த சில மாதங்களாக பல்வேறு பட்ட பிரபலங்களின் திடீர் இழப்புக்களால் ஏங்கித் தவித்து வருகின்றது.
இவ்வாறானதொரு நிலையில் தற்போது கார்த்திக் நடிப்பில் வெளியாகிய 'பருத்திவீரன்' படத்தில் பொணந்தின்னி என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகர் செவ்வாழை ராசு இன்று காலமானார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கார்த்தி, பிரியாமணி நடிப்பில் அமீர் இயக்கத்தில் உருவான ’பருத்திவீரன்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் ஒருவர் காலமானதை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அமீர் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவான ’பருத்திவீரன்’ என்ற திரைப்படம் 2007 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் மூலமாகத் தான் கார்த்தி நடிகராக அறிமுகமானார். இவருடன் இணைந்து பிரியாமணியும் நடித்திருந்தார். இதில் சிறப்பாக நடித்ததற்காக பிரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது.
இந்த நிலையில் இந்த படத்தில் பொணந்தின்னி என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகர் செவ்வாழை ராசு. தேனி மாவட்டத்தை சேர்ந்த இவர் பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் காமெடி நடிகராகவும் நடித்துள்ளார். குறிப்பாக மைனா, கிழக்கு சீமையிலே, கந்தசாமி ஆகிய படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செவ்வாழை ராசு சிகிச்சை பலன் இன்றி தனது 70வயதில் இன்றைய தினம் காலமானார்.
இதனை அடுத்து அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
ஓ.மை.காட். மற்றுமொரு தமிழ் திரைப்பட நடிகர் திடீர் மரணம். ரசிகர்கள் அதிர்ச்சி.samugammedia தென்னிந்திய திரையுலகில் கடந்த சில மாதங்களாக பல்வேறு பட்ட பிரபலங்களின் திடீர் இழப்புக்களால் ஏங்கித் தவித்து வருகின்றது.இவ்வாறானதொரு நிலையில் தற்போது கார்த்திக் நடிப்பில் வெளியாகிய 'பருத்திவீரன்' படத்தில் பொணந்தின்னி என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகர் செவ்வாழை ராசு இன்று காலமானார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கார்த்தி, பிரியாமணி நடிப்பில் அமீர் இயக்கத்தில் உருவான ’பருத்திவீரன்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் ஒருவர் காலமானதை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.அமீர் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவான ’பருத்திவீரன்’ என்ற திரைப்படம் 2007 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் மூலமாகத் தான் கார்த்தி நடிகராக அறிமுகமானார். இவருடன் இணைந்து பிரியாமணியும் நடித்திருந்தார். இதில் சிறப்பாக நடித்ததற்காக பிரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது.இந்த நிலையில் இந்த படத்தில் பொணந்தின்னி என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகர் செவ்வாழை ராசு. தேனி மாவட்டத்தை சேர்ந்த இவர் பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் காமெடி நடிகராகவும் நடித்துள்ளார். குறிப்பாக மைனா, கிழக்கு சீமையிலே, கந்தசாமி ஆகிய படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செவ்வாழை ராசு சிகிச்சை பலன் இன்றி தனது 70வயதில் இன்றைய தினம் காலமானார். இதனை அடுத்து அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.