• May 04 2024

தென்னிலங்கையில் ஓட்டோ சாரதி ஒருவர் சுட்டுப் படுகொலை! samugammedia

Chithra / Jul 4th 2023, 9:33 am
image

Advertisement

தென்னிலங்கையில் ஓட்டோ சாரதி ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அம்பாந்தோட்டை மாவட்டம், வீரகெட்டிய பிரதேசத்தில் நேற்றிரவு 7.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

38 வயதுடைய எஸ்.சஞ்சீவ என்ற நபரே துப்பாக்கிச்சூட்டில் சாவடைந்துள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான சஞ்சீவ, ஓட்டோவில் தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது பிறிதொரு ஓட்டோவில் வந்த இருவர், அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான சஞ்சீவ சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார், கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

தென்னிலங்கையில் ஓட்டோ சாரதி ஒருவர் சுட்டுப் படுகொலை samugammedia தென்னிலங்கையில் ஓட்டோ சாரதி ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.அம்பாந்தோட்டை மாவட்டம், வீரகெட்டிய பிரதேசத்தில் நேற்றிரவு 7.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.38 வயதுடைய எஸ்.சஞ்சீவ என்ற நபரே துப்பாக்கிச்சூட்டில் சாவடைந்துள்ளார்.மூன்று பிள்ளைகளின் தந்தையான சஞ்சீவ, ஓட்டோவில் தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது பிறிதொரு ஓட்டோவில் வந்த இருவர், அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான சஞ்சீவ சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார், கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement