இலங்கையில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு முன்மொழிவுகளை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரவேண்டிய அவசியமில்லை எனவும் ஜனாதிபதி அவரது அரசியலுக்கு ஆதாயம் தேடுவதற்காகவே கடன் மறுசீரமைப்பு முன்மொழிவுகள் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படுவதாக
எதிர்க்கட்சியின் பிரதம ஹெறடாவும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஸ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.
உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பது தொடர்பில், இன்று நாட்டில் நிறைய விவாதங்கள் உள்ளன,
இந்த உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு முன்மொழிவுகளை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வர வேண்டிய அவசியமில்லை, அவை எதுவும் அரசாங்க கொள்கைகள் அல்ல, நாங்கள் 16 முறை சர்வதேச நாணயநிதியத்திடம் சென்றுள்ளோம். ஒப்பந்தங்கள் மற்றும் சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுவதில்லை.
ஒரு புதிய சட்டத்தையோ, அல்லது பழைய சட்டத்தையோ மாற்றினால்தான் நாடாளுமன்ற கூட்டப்படும்.
அப்படியென்றால் இந்த அரசாங்கம் என்ன செய்கிறது?
எதிர்க்கட்சிகளை இதில் ஈடுபடுத்தி அரசியல் ஆதாயம் பெறவே இது நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
நான் எப்பொழுதும் கூறுகின்ற ஒரு விடயம், அரசாங்கம் நாட்டை வங்குரோத்தியமாக்கியது,
நிதியமைச்சும் அரசாங்கமும் மத்திய வங்கியும் சேர்ந்து நாட்டை வங்குரோத்தியமைத்ததாலேயே
இந்த பிரச்சினைகள் அனைத்தும் தோன்றின.
அரசு முன்வைக்கும் முன்மொழிவுகளில் சில தெளிவற்ற பகுதிகள் உள்ளன,
பெரிய வார்த்தைகளை பயன்படுத்தி, சாமானியர்களுக்கு புரியாத வகையில் உண்மையை மறைக்கின்றனர்,
ஆனால் இந்த திட்டத்தில் ஒன்று தெளிவாக தெரிகிறது, இது ஊழியருக்கான அரசின் முன்மொழிவு.
வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற ஓய்வூதியப் பலன்கள்.
மறுசீரமைப்புத் திட்டத்தில் பங்கேற்றால், வருங்கால வைப்பு நிதிகள் வைத்திருக்கும் கருவூலப் பத்திரங்களின் முதிர்வு காலம் 2027 முதல் 2038 வரை நீட்டிக்கப்படும்.
அரசியல் ஆதாயத்திற்காகவே நாடாளுமன்றம் கூட்டப்படுகின்றது – மறைக்கப்பட்ட உண்மையை வெளியிட்ட கிரியல்ல. samugammedia இலங்கையில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு முன்மொழிவுகளை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரவேண்டிய அவசியமில்லை எனவும் ஜனாதிபதி அவரது அரசியலுக்கு ஆதாயம் தேடுவதற்காகவே கடன் மறுசீரமைப்பு முன்மொழிவுகள் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படுவதாக எதிர்க்கட்சியின் பிரதம ஹெறடாவும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஸ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பது தொடர்பில், இன்று நாட்டில் நிறைய விவாதங்கள் உள்ளன, இந்த உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு முன்மொழிவுகளை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வர வேண்டிய அவசியமில்லை, அவை எதுவும் அரசாங்க கொள்கைகள் அல்ல, நாங்கள் 16 முறை சர்வதேச நாணயநிதியத்திடம் சென்றுள்ளோம். ஒப்பந்தங்கள் மற்றும் சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுவதில்லை.ஒரு புதிய சட்டத்தையோ, அல்லது பழைய சட்டத்தையோ மாற்றினால்தான் நாடாளுமன்ற கூட்டப்படும்.அப்படியென்றால் இந்த அரசாங்கம் என்ன செய்கிறது எதிர்க்கட்சிகளை இதில் ஈடுபடுத்தி அரசியல் ஆதாயம் பெறவே இது நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படுகிறது.நான் எப்பொழுதும் கூறுகின்ற ஒரு விடயம், அரசாங்கம் நாட்டை வங்குரோத்தியமாக்கியது, நிதியமைச்சும் அரசாங்கமும் மத்திய வங்கியும் சேர்ந்து நாட்டை வங்குரோத்தியமைத்ததாலேயே இந்த பிரச்சினைகள் அனைத்தும் தோன்றின.அரசு முன்வைக்கும் முன்மொழிவுகளில் சில தெளிவற்ற பகுதிகள் உள்ளன, பெரிய வார்த்தைகளை பயன்படுத்தி, சாமானியர்களுக்கு புரியாத வகையில் உண்மையை மறைக்கின்றனர், ஆனால் இந்த திட்டத்தில் ஒன்று தெளிவாக தெரிகிறது, இது ஊழியருக்கான அரசின் முன்மொழிவு. வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற ஓய்வூதியப் பலன்கள். மறுசீரமைப்புத் திட்டத்தில் பங்கேற்றால், வருங்கால வைப்பு நிதிகள் வைத்திருக்கும் கருவூலப் பத்திரங்களின் முதிர்வு காலம் 2027 முதல் 2038 வரை நீட்டிக்கப்படும்.