• Feb 12 2026

நாட்டின் பல பகுதிகளில் இன்று இடம்பெற்ற பட்டிப்பொங்கல்!

shanuja / Jan 16th 2026, 5:42 pm
image

தமிழர்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான பட்டிப்பொங்கல் தினத்தினை உலகெங்கும் உள்ள இந்துக்கள் இன்றையதினம்(16) கொண்டாடி வருகின்றனர் .


அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உழவர்களின் இல்லங்களிலும் ஆலயங்களிலும் விசேட விதமாக பசுக்கள் பட்டு வஸ்த்திரங்கள் , பூமாலைகளினால் அலங்கரிக்கப்பட்டு மாட்டு பட்டிகளிலும் இல்லங்களிலும் பட்டிப்பொங்கல் பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.


ஈழத்து திருச்செந்தூர் என போற்றப்படும். மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இன்று காலை பட்டிப்பொங்கல் விழா சிறப்பாக இடம்பெற்றது.


பட்டிப்பொங்கல் (மாட்டுப்பொங்கல்) என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். 


இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய காளைகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு இன்றைய தினம்(16) முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சிறப்பாக நடைபெற்றது.



நாட்டின் பல பகுதிகளில் இன்று இடம்பெற்ற பட்டிப்பொங்கல் தமிழர்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான பட்டிப்பொங்கல் தினத்தினை உலகெங்கும் உள்ள இந்துக்கள் இன்றையதினம்(16) கொண்டாடி வருகின்றனர் .அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உழவர்களின் இல்லங்களிலும் ஆலயங்களிலும் விசேட விதமாக பசுக்கள் பட்டு வஸ்த்திரங்கள் , பூமாலைகளினால் அலங்கரிக்கப்பட்டு மாட்டு பட்டிகளிலும் இல்லங்களிலும் பட்டிப்பொங்கல் பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.ஈழத்து திருச்செந்தூர் என போற்றப்படும். மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இன்று காலை பட்டிப்பொங்கல் விழா சிறப்பாக இடம்பெற்றது.பட்டிப்பொங்கல் (மாட்டுப்பொங்கல்) என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய காளைகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு இன்றைய தினம்(16) முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சிறப்பாக நடைபெற்றது.

Advertisement

Advertisement

Advertisement