இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டினரும் தங்களது குடும்ப திருமண நிகழ்ச்சிகளை துபாயில் நடத்த விரும்புகின்றனர் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த ஆய்வில் கூறப்பட்டதாவது:-
துபாய் நகரம் சுற்றுலா, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மிகவும் முக்கியமான நகரமாக திகழ்கிறது.
இந்த நகரில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம் உள்ளிட்ட 200 நாட்டை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
பல்வேறு நாட்டினர் வசித்து வந்தாலும் எந்தவிதமான வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர்.
இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாட்டை சேர்ந்தவர்களும் தங்களது குடும்ப திருமண நிகழ்ச்சிகளை துபாயில் நடத்த அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
திருமணம் மட்டுமல்லாது தங்களது குடும்பத்தின் பிற நிகழ்ச்சிகளையும் இங்கு நடத்த விரும்புகின்றனர்.
உலகில் துபாய் நகரம் பொதுமக்கள் திருமண நிகழ்ச்சிகளை நடத்த விரும்பும் 5-வது நகரம் என்ற பெருமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
துபாயில் அதிக அளவில் நட்சத்திர ஓட்டல்கள் இருப்பதும், உலகின் மிகவும் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபா, துபாய் பிரேம், துபாய் எதிர்கால அருங்காட்சியகம், அய்ன் துபாய் உள்ளிட்ட முக்கிய இடங்கள் இருப்பது இந்த திருமண நிகழ்ச்சிகளை பொதுமக்கள் நடத்த விரும்புவதற்கு மேலும் முக்கிய காரணமாக இருக்கிறது. துபாயில் 794-க்கும் மேற்பட்ட ஆடம்பர ஓட்டல்கள் இருக்கின்றன.
இதுமட்டுமல்லாமல் இயற்கையான வகையில் பாலைவனம், மலைப்பகுதி, கடல் பகுதியில் கப்பல்கள் மூலம் பொழுதுபோக்கு இடம் உள்ளது. இதுவும் மணமக்கள் விரும்பக்கூடிய இடமாக உள்ளது.
திருமண நிகழ்ச்சிகளை வீடியோ, புகைப்படம் உள்ளிட்டவற்றை சிறப்பாக செய்யும் வசதிகளும் சிறப்பு தொழில்நுட்பத்துடன் கூடிய வகையில் இங்கு உள்ளது.திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்போருக்கு தேவையான உணவு வகைகள் அவர்கள் விரும்பும் வகையில் ஏற்பாடு செய்யும் வசதிகள் உள்ளது.
இதனால் எத்தகைய வயதினரும் தங்களுக்கு ஏற்ற உணவுப்பொருட்களை எளிதில் பெற்றுக் கொள்ள முடியும்.
குறிப்பாக திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் எந்த நாட்டில் இருந்தும் துபாய்க்கு வரும் வகையில் விமான வசதிகள் இருப்பதும் மேலும் சிறப்புக்குரியது.இதுபோன்ற பல்வேறு காரணங்கள் துபாயில் திருமண நிகழ்ச்சிகளை பலரும் நடத்துவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமண நிகழ்வுகளை துபாயில் நடத்த விரும்பும் உலக மக்கள் இது தான் காரணமா இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டினரும் தங்களது குடும்ப திருமண நிகழ்ச்சிகளை துபாயில் நடத்த விரும்புகின்றனர் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த ஆய்வில் கூறப்பட்டதாவது:-துபாய் நகரம் சுற்றுலா, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மிகவும் முக்கியமான நகரமாக திகழ்கிறது. இந்த நகரில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம் உள்ளிட்ட 200 நாட்டை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.பல்வேறு நாட்டினர் வசித்து வந்தாலும் எந்தவிதமான வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர்.இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாட்டை சேர்ந்தவர்களும் தங்களது குடும்ப திருமண நிகழ்ச்சிகளை துபாயில் நடத்த அதிக ஆர்வம் காட்டுகின்றனர். திருமணம் மட்டுமல்லாது தங்களது குடும்பத்தின் பிற நிகழ்ச்சிகளையும் இங்கு நடத்த விரும்புகின்றனர்.உலகில் துபாய் நகரம் பொதுமக்கள் திருமண நிகழ்ச்சிகளை நடத்த விரும்பும் 5-வது நகரம் என்ற பெருமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.துபாயில் அதிக அளவில் நட்சத்திர ஓட்டல்கள் இருப்பதும், உலகின் மிகவும் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபா, துபாய் பிரேம், துபாய் எதிர்கால அருங்காட்சியகம், அய்ன் துபாய் உள்ளிட்ட முக்கிய இடங்கள் இருப்பது இந்த திருமண நிகழ்ச்சிகளை பொதுமக்கள் நடத்த விரும்புவதற்கு மேலும் முக்கிய காரணமாக இருக்கிறது. துபாயில் 794-க்கும் மேற்பட்ட ஆடம்பர ஓட்டல்கள் இருக்கின்றன.இதுமட்டுமல்லாமல் இயற்கையான வகையில் பாலைவனம், மலைப்பகுதி, கடல் பகுதியில் கப்பல்கள் மூலம் பொழுதுபோக்கு இடம் உள்ளது. இதுவும் மணமக்கள் விரும்பக்கூடிய இடமாக உள்ளது.திருமண நிகழ்ச்சிகளை வீடியோ, புகைப்படம் உள்ளிட்டவற்றை சிறப்பாக செய்யும் வசதிகளும் சிறப்பு தொழில்நுட்பத்துடன் கூடிய வகையில் இங்கு உள்ளது.திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்போருக்கு தேவையான உணவு வகைகள் அவர்கள் விரும்பும் வகையில் ஏற்பாடு செய்யும் வசதிகள் உள்ளது.இதனால் எத்தகைய வயதினரும் தங்களுக்கு ஏற்ற உணவுப்பொருட்களை எளிதில் பெற்றுக் கொள்ள முடியும்.குறிப்பாக திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் எந்த நாட்டில் இருந்தும் துபாய்க்கு வரும் வகையில் விமான வசதிகள் இருப்பதும் மேலும் சிறப்புக்குரியது.இதுபோன்ற பல்வேறு காரணங்கள் துபாயில் திருமண நிகழ்ச்சிகளை பலரும் நடத்துவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.