யாழ்.மாவட்டத்திற்குட்பட்ட வேலணைப் பிரதேச செயளாளர் பிரிவிற்குட்பட்ட மண்டைதீவு கிழக்கு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட 29 தனி நபர்களுக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கு அதிகமான காணிகளைச் சுவீகரித்து வெலுசுமண கடற்படை முகாம் அமைப்பதற்காக நில அளவைத் திணைக்களத்தால் இன்று(12) அளவீடு செய்யப்படும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந் நிலையில் காணி அளவீடு மற்றும் காணி சுவீகரிப்பை தடுத்து நிறுத்தக் கோரி மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் இணைந்து எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
இப் போராட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள், பிரதேச மக்கள் எனப் பலர் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர்.