• Jun 30 2024

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள்...! சஜித் பிரேமதாச அவ்வாறு கூறவில்லை...! ஐக்கிய மக்கள் சக்தி பகீர்...!

Sharmi / Jun 12th 2024, 11:41 am
image

Advertisement

வடக்குக்கு ஒரு சட்டமும் தெற்குக்கு ஒரு சட்டமும் இருக்க முடியாது எனவும் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படவேண்டும் என சஜித் பிரேமதாச கூறவில்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற  உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று(11)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் போது சமூக மற்றும் சுற்றாடல் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில் எவ்வித சிக்கலும் இல்லை.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் அதனையே குறிப்பிட்டிருந்தார். மாறாக பொலிஸ் அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படவேண்டும் என அவர் கூறவில்லை.

வடக்குக்கு ஒரு சட்டமும் தெற்குக்கு ஒரு சட்டமும் இருக்க முடியாது. முழு நாட்டுக்கும் ஒரே சட்டம் என்ற ரீதியில் தமிழ் மக்களுக்கான நியாயத்தை வழங்கவேண்டும் என்று தான் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டிருந்தார். 

பாடசாலைகள் மற்றும் மருத்துவமனை களில் பெரும்பாலானவை மாகாணச பைகளுக்கே வழங்கப்பட்டுள்ளன. உள்ளூராட்சி நிறுவனங்கள் அனைத் தும் கூட மாகாணசபைகளின் கீழேயே உள்ளன. அவர் கூறியதன் அர்த்தமும் இதுவே. 

அதனை விடுத்து பொலிஸ் அதிகாரம் முற்றாக வழங்கப்படும் என்பதல்ல.

அவ்வாறெனில் தற்போதுள்ளதுடன் சிலவிடயங்கள் இணையும். 

அந்தவகையில் சமூக பொலிஸ் மற்றும் சுற்றாடல் பொலிஸ் என்பவற்றை வழங்குவதில் சிக்கல் என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும். 

ஆனால், நான் இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரிடம் எதனை கேட்கவில்லை. வடக்கு மக்களுக்கு நியாயம் வழங்கப்படவேண்டும். வடக்கு மாணவர்களுக்கும் தெற்கிலுள்ள மாணவர்களைப் போன்றே கல்வி கற்பதற்கு உரிமையுள்ளது.

வடக்கு மக்களுக்கும் இலங்கை பிரஜைகள் என்ற ரீதியில் ஏனைய மக்கள் அனுபவிக்கும் சகல வசதிகளையும் அனுபவிப்பதற்கான உரிமை உள்ளது. 

ஆனால் அவற்றை எமது நாட்டு அரசாங்கங்கள் வழங்கவில்லை. ஐ.தே.க அரசாங்கமோ, பொதுஜன பெரமுன அரசாங்கமோ அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. 

எனவே தான் அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அவற்றை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.




மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள். சஜித் பிரேமதாச அவ்வாறு கூறவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி பகீர். வடக்குக்கு ஒரு சட்டமும் தெற்குக்கு ஒரு சட்டமும் இருக்க முடியாது எனவும் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படவேண்டும் என சஜித் பிரேமதாச கூறவில்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற  உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று(11)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் போது சமூக மற்றும் சுற்றாடல் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில் எவ்வித சிக்கலும் இல்லை.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் அதனையே குறிப்பிட்டிருந்தார். மாறாக பொலிஸ் அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படவேண்டும் என அவர் கூறவில்லை.வடக்குக்கு ஒரு சட்டமும் தெற்குக்கு ஒரு சட்டமும் இருக்க முடியாது. முழு நாட்டுக்கும் ஒரே சட்டம் என்ற ரீதியில் தமிழ் மக்களுக்கான நியாயத்தை வழங்கவேண்டும் என்று தான் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டிருந்தார். பாடசாலைகள் மற்றும் மருத்துவமனை களில் பெரும்பாலானவை மாகாணச பைகளுக்கே வழங்கப்பட்டுள்ளன. உள்ளூராட்சி நிறுவனங்கள் அனைத் தும் கூட மாகாணசபைகளின் கீழேயே உள்ளன. அவர் கூறியதன் அர்த்தமும் இதுவே. அதனை விடுத்து பொலிஸ் அதிகாரம் முற்றாக வழங்கப்படும் என்பதல்ல.அவ்வாறெனில் தற்போதுள்ளதுடன் சிலவிடயங்கள் இணையும். அந்தவகையில் சமூக பொலிஸ் மற்றும் சுற்றாடல் பொலிஸ் என்பவற்றை வழங்குவதில் சிக்கல் என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும். ஆனால், நான் இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரிடம் எதனை கேட்கவில்லை. வடக்கு மக்களுக்கு நியாயம் வழங்கப்படவேண்டும். வடக்கு மாணவர்களுக்கும் தெற்கிலுள்ள மாணவர்களைப் போன்றே கல்வி கற்பதற்கு உரிமையுள்ளது.வடக்கு மக்களுக்கும் இலங்கை பிரஜைகள் என்ற ரீதியில் ஏனைய மக்கள் அனுபவிக்கும் சகல வசதிகளையும் அனுபவிப்பதற்கான உரிமை உள்ளது. ஆனால் அவற்றை எமது நாட்டு அரசாங்கங்கள் வழங்கவில்லை. ஐ.தே.க அரசாங்கமோ, பொதுஜன பெரமுன அரசாங்கமோ அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. எனவே தான் அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அவற்றை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement