சுகாதாரத்துறையில் நிலவிவரும் நெருக்கடிகள், மருத்துவர்கள் மற்றும் சுகாதாதத்துறை ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசு உரிய தீர்வை காண வலியுறுத்தி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று (20) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை முன்றலில் இன்று நண்பகல் 12.00 மணியளவில் ஒன்று கூடிய வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
சுகாதாரத்துறை எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளை உள்ளடக்கி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் எட்டு அம்ச கோரிக்கைகளை அரசுக்கு அனுப்பிய போதிலும் அதனை அரசு நிராகரித்துள்ளது. அதனை நிறைவேற்ற வலியுறுத்தியும், சுகாதாரத்துறையில் நிலவிவரும் நெருக்கடிகள், மருத்துவர்கள் மற்றும் சுகாதாதத்துறை ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசு உரிய தீர்வை காண வலியுறுத்தியும் இக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.