• Sep 20 2024

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்- முக்கிய அதிகாரிகள் அவசரமாக கொழும்புக்கு அழைப்பு!

Sharmi / Dec 21st 2022, 1:40 pm
image

Advertisement

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அனைத்து மாவட்டங்களின் பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் நாளைமறுதினம்(23)  கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் நாளைமறுதினம் காலை 10.00 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது.

அனைத்து மாவட்டங்களின் பிரதி உதவி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்  சமன் ஸ்ரீ ரத்நாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

தேர்தலை நடத்துவது தொடர்பான சகல விடயங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்- முக்கிய அதிகாரிகள் அவசரமாக கொழும்புக்கு அழைப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அனைத்து மாவட்டங்களின் பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் நாளைமறுதினம்(23)  கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் நாளைமறுதினம் காலை 10.00 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது.அனைத்து மாவட்டங்களின் பிரதி உதவி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்  சமன் ஸ்ரீ ரத்நாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.தேர்தலை நடத்துவது தொடர்பான சகல விடயங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement