ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (30) துபாய் செல்லவுள்ளார்.
இந்த வருட மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று அமைச்சர்களும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு இன்று முதல் டிசம்பர் 12 ஆம் தேதி வரை துபாய் எக்ஸ்போ சிட்டியில் அரசு தலைவர்கள், பொது தனியார் துறை பிரதிநிதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்கிறது.
பாதிக்கப்படக்கூடிய மற்றும் வளரும் நாடுகளுக்கான காலநிலை நீதி மன்றத்தை நடைமுறைப்படுத்துவது உட்பட 03 முன்மொழிவுகளை இந்த மாநாட்டில் முன்வைக்க இலங்கை திட்டமிட்டுள்ளதாகவும் கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சி எம்.பிகளுடன் ஜனாதிபதி ரணில் துபாய்க்கு பயணம்.samugammedia ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (30) துபாய் செல்லவுள்ளார்.இந்த வருட மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று அமைச்சர்களும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு இன்று முதல் டிசம்பர் 12 ஆம் தேதி வரை துபாய் எக்ஸ்போ சிட்டியில் அரசு தலைவர்கள், பொது தனியார் துறை பிரதிநிதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்கிறது.பாதிக்கப்படக்கூடிய மற்றும் வளரும் நாடுகளுக்கான காலநிலை நீதி மன்றத்தை நடைமுறைப்படுத்துவது உட்பட 03 முன்மொழிவுகளை இந்த மாநாட்டில் முன்வைக்க இலங்கை திட்டமிட்டுள்ளதாகவும் கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.