• Apr 27 2024

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட முக்கியஸ்தர்கள்!

Chithra / Jan 9th 2023, 11:02 pm
image

Advertisement

அம்பாறை மாவட்டம் - அம்பாறை தேர்தல் தொகுதி, நாமல் ஓயா பிரதேச சபை பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் ஞானதிலக்க நேற்று(08) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவைச் சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.


இதையடுத்து பிங்கிரிய பிரதேச சபை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் லெஸ்லி குமார இன்று (09) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவைச் சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டார்.


இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டுப் பிரதானி நளின் பண்டாரவும் கலந்து கொண்டார்.

கடுவலை மாநகர சபை உறுப்பினர் சன்ன பெதும் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். இவர் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர் ஆவார்.

இந்நிகழ்வில் கடுவலை தேர்தல் தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தி பிரதான அமைப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திரவும் கலந்து கொண்டார்.


ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட முக்கியஸ்தர்கள் அம்பாறை மாவட்டம் - அம்பாறை தேர்தல் தொகுதி, நாமல் ஓயா பிரதேச சபை பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் ஞானதிலக்க நேற்று(08) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவைச் சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.இதையடுத்து பிங்கிரிய பிரதேச சபை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் லெஸ்லி குமார இன்று (09) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவைச் சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டார்.இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டுப் பிரதானி நளின் பண்டாரவும் கலந்து கொண்டார்.கடுவலை மாநகர சபை உறுப்பினர் சன்ன பெதும் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். இவர் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர் ஆவார்.இந்நிகழ்வில் கடுவலை தேர்தல் தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தி பிரதான அமைப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திரவும் கலந்து கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement