இலங்கையின் 75வது சுதந்திர தினத்தினை கறுப்பு தினமாக இலங்கையில் வடக்கு கிழக்கில் அனுஷ்டித்து போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் இந்த போராட்டங்களுக்கு வலுச் சேர்க்கும் முகமாக லண்டனில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
13ஆவது சீர்திருத்தம் என்பது ஈழத்தில் உள்ள எமது உறவுகளுக்கான ஒரு தீர்வு அல்ல. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடாத்தப்பட்டு நீதி வழங்க வேண்டும்.
ஒற்றையாட்சிக்குள் 13வது சீர்திருத்தத்தை அமுல்படுத்துவதன் மூலம் எமது உரிமைகளை வழங்க முடியும் என இந்தியாவோ சர்வதேசமோ நினைக்க கூடாது என்றனர்.
போராட்டக்காரர்கள் பதாகைகள், புலிக்கொடிகள் போன்றவற்றை ஏந்தி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு கடந்த தமிழீழ அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப் போராட்டத்தில் 20ற்கும் மேற்பட்ட புலம்பெயர் ஈழத்தமிழர்கள் கலந்துகொண்டனர்.
லண்டனில் புலிக்கொடியுடன் வெடித்தது போராட்டம் இலங்கையின் 75வது சுதந்திர தினத்தினை கறுப்பு தினமாக இலங்கையில் வடக்கு கிழக்கில் அனுஷ்டித்து போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் இந்த போராட்டங்களுக்கு வலுச் சேர்க்கும் முகமாக லண்டனில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,13ஆவது சீர்திருத்தம் என்பது ஈழத்தில் உள்ள எமது உறவுகளுக்கான ஒரு தீர்வு அல்ல. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடாத்தப்பட்டு நீதி வழங்க வேண்டும்.ஒற்றையாட்சிக்குள் 13வது சீர்திருத்தத்தை அமுல்படுத்துவதன் மூலம் எமது உரிமைகளை வழங்க முடியும் என இந்தியாவோ சர்வதேசமோ நினைக்க கூடாது என்றனர்.போராட்டக்காரர்கள் பதாகைகள், புலிக்கொடிகள் போன்றவற்றை ஏந்தி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு கடந்த தமிழீழ அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப் போராட்டத்தில் 20ற்கும் மேற்பட்ட புலம்பெயர் ஈழத்தமிழர்கள் கலந்துகொண்டனர்.