• May 13 2024

நோட்டோ உறுப்பு நாடுகள் மீது அணு ஆயுதத் தாக்குதல் - புட்டின் எச்சரிக்கை!

Tamil nila / Dec 12th 2022, 6:49 pm
image

Advertisement

தங்கள் மீது தாக்குதல் நடத்தும் எதிரியின் திறனை முன்கூட்டியே அழிக்கும் அமெரிக்காவின்  பாணியை தாங்களும் பின்பற்றலாம் என்று ரஷ்யா அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்துள்ளார்.


நோட்டோவுடன் மோதல் தொடங்குவதற்கு முன்னதாகவே அந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று அவா் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

கிா்கிஸ்தானில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின் போது,  நேட்டோ அமைப்புடன் அணு ஆயுதப் போா் மூள்வதற்கான அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக கடந்த வாரம் விளாதிமீா் புதின் கூறியது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

 

அதற்கு பதிலளித்து புதின் தெரிவித்தாவது,

 

எதிா்காலத்தில் எதிரிகள் தங்கள் மீது தாக்குதல் நடத்தப் போகிறாா்கள் என்ற சந்தேகம் எழுந்தால், அவா்களது தாக்குதல் திறனை முறியடிக்கும் வகையில் முன்கூட்டியே தாக்குதல் நடத்தும் இராணுவ உத்தியை அமெரிக்கா பின்பற்றி வருகின்றது.

 

அது மட்டுமின்றி, எதிரிகளை நிராயுதபாணிகளாக்குவதற்கான தாக்குதல் நுட்பத்தையும் அமெரிக்கா வடிவமைத்து வருகின்றது.

தங்களது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக குறித்த  நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்கிறது.

 

அதே போன்ற உத்திகளை கடைப்பிடிப்பது குறித்து நாங்களும் பரிசீலித்து வருகிறோம். நம்முடைய எதிரியாகக் கூடிய ஒரு நாடு தங்களால் முன்னெச்சரிக்கை தாக்குதல் நடத்த முடியும் என்று கருதும்போது, நாமும் அவ்வாறு கருதாமல் இருக்க முடியாது.

 

அத்தகைய தாக்குதல் நடத்துவதற்கான துல்லியம் மற்றும் செயல்திறனில் அமெரிக்காவின் ஏவுகணைகளை ரஷ்யாவின் ஏவுகணைகள் விஞ்சி நிற்கின்றன என்றாா் விளாதிமீா் புதின்.

 

தங்களுக்கு எதிராக, உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில், நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷ்யா கூறி வருகின்றது. எனினும், நேட்டோவில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்த நிலையில், அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

 

அதற்கு முன்னதாக, குறித்த போரில் எந்த நாடாவது உக்ரைனுக்கு ஆதரவாக தலையிட்டால் அவை வரலாறு காணாத பேரழிவைச் சந்திக்க வேண்டும் என்று விளாதிமீா் புதின் எச்சரிக்கை விடுத்திருந்தாா்.

 

அதையும் மீறி,  போரில் தங்களுக்கு எதிராக உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்களை அனுப்புவது,  உக்ரைன் வீரா்களுக்கு போா்ப் பயிற்சியளிப்பது, தங்கள் நிலைகள் மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு உளவுத் தகவல்கள் அளிப்பது மூலம் போரில் நேட்டோ உறுப்பு நாடுகள் நேரடியாக பங்கேற்பதாக ரஷ்யா குற்றம் சாட்டி வருகிறது.

 

உக்ரைன் தொடா்பான நேட்டோ நிலைகள் மீது தாக்குதல் நடத்த தங்களுக்கு சட்ட உரிமை உள்ளதாக ரஷ்யா கூறுகின்றது.

 

உக்ரைனின் குறிப்பிட்ட பகுதியில் தற்போது நடைபெற்று வரும் போா் சிறு தவறு நோ்ந்தால் கூட, நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான மிகப் பெரிய போராக உருவெடுக்கக் கூடிய அபாயம் உள்ள நேட்டோ அமைப்பின் பொதுச் செயலா் ஜென்ஸ் ஸ்டால்டன்பா்க் அண்மையில் அச்சம் தெரிவித்திருந்தாா்.

 

நேட்டோ உறுப்பு நாடுகள் மீது முன்கூட்டியே அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று அதிபா் புதின் தற்போது மறைமுகமாக எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நோட்டோ உறுப்பு நாடுகள் மீது அணு ஆயுதத் தாக்குதல் - புட்டின் எச்சரிக்கை தங்கள் மீது தாக்குதல் நடத்தும் எதிரியின் திறனை முன்கூட்டியே அழிக்கும் அமெரிக்காவின்  பாணியை தாங்களும் பின்பற்றலாம் என்று ரஷ்யா அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்துள்ளார்.நோட்டோவுடன் மோதல் தொடங்குவதற்கு முன்னதாகவே அந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று அவா் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கிா்கிஸ்தானில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின் போது,  நேட்டோ அமைப்புடன் அணு ஆயுதப் போா் மூள்வதற்கான அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக கடந்த வாரம் விளாதிமீா் புதின் கூறியது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து புதின் தெரிவித்தாவது, எதிா்காலத்தில் எதிரிகள் தங்கள் மீது தாக்குதல் நடத்தப் போகிறாா்கள் என்ற சந்தேகம் எழுந்தால், அவா்களது தாக்குதல் திறனை முறியடிக்கும் வகையில் முன்கூட்டியே தாக்குதல் நடத்தும் இராணுவ உத்தியை அமெரிக்கா பின்பற்றி வருகின்றது. அது மட்டுமின்றி, எதிரிகளை நிராயுதபாணிகளாக்குவதற்கான தாக்குதல் நுட்பத்தையும் அமெரிக்கா வடிவமைத்து வருகின்றது.தங்களது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக குறித்த  நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்கிறது. அதே போன்ற உத்திகளை கடைப்பிடிப்பது குறித்து நாங்களும் பரிசீலித்து வருகிறோம். நம்முடைய எதிரியாகக் கூடிய ஒரு நாடு தங்களால் முன்னெச்சரிக்கை தாக்குதல் நடத்த முடியும் என்று கருதும்போது, நாமும் அவ்வாறு கருதாமல் இருக்க முடியாது. அத்தகைய தாக்குதல் நடத்துவதற்கான துல்லியம் மற்றும் செயல்திறனில் அமெரிக்காவின் ஏவுகணைகளை ரஷ்யாவின் ஏவுகணைகள் விஞ்சி நிற்கின்றன என்றாா் விளாதிமீா் புதின். தங்களுக்கு எதிராக, உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில், நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷ்யா கூறி வருகின்றது. எனினும், நேட்டோவில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்த நிலையில், அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது. அதற்கு முன்னதாக, குறித்த போரில் எந்த நாடாவது உக்ரைனுக்கு ஆதரவாக தலையிட்டால் அவை வரலாறு காணாத பேரழிவைச் சந்திக்க வேண்டும் என்று விளாதிமீா் புதின் எச்சரிக்கை விடுத்திருந்தாா். அதையும் மீறி,  போரில் தங்களுக்கு எதிராக உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்களை அனுப்புவது,  உக்ரைன் வீரா்களுக்கு போா்ப் பயிற்சியளிப்பது, தங்கள் நிலைகள் மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு உளவுத் தகவல்கள் அளிப்பது மூலம் போரில் நேட்டோ உறுப்பு நாடுகள் நேரடியாக பங்கேற்பதாக ரஷ்யா குற்றம் சாட்டி வருகிறது. உக்ரைன் தொடா்பான நேட்டோ நிலைகள் மீது தாக்குதல் நடத்த தங்களுக்கு சட்ட உரிமை உள்ளதாக ரஷ்யா கூறுகின்றது. உக்ரைனின் குறிப்பிட்ட பகுதியில் தற்போது நடைபெற்று வரும் போா் சிறு தவறு நோ்ந்தால் கூட, நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான மிகப் பெரிய போராக உருவெடுக்கக் கூடிய அபாயம் உள்ள நேட்டோ அமைப்பின் பொதுச் செயலா் ஜென்ஸ் ஸ்டால்டன்பா்க் அண்மையில் அச்சம் தெரிவித்திருந்தாா். நேட்டோ உறுப்பு நாடுகள் மீது முன்கூட்டியே அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று அதிபா் புதின் தற்போது மறைமுகமாக எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement