• Jul 07 2024

தமிழர் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை - பலர் கைது..!

Chithra / Jul 4th 2024, 3:22 pm
image

Advertisement


யாழ்ப்பாணம் - வடவராட்சி கிழக்கு குடத்தனை  பகுதியில் இன்று அதிகாலையிலிருந்து மருதங்கேணி  போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் மருதங்கேணி போலீசார் மற்றும் இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் என்றும் குறிப்பாக வாள் வெட்டில் ஈடுபடுதல், மக்களை மிரட்டுதல், சட்டவிரோத கசிப்பு உற்பத்தி  விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் என்றும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சுற்றிவளைப்பு  நடவடிக்கையில் போலீஸ் மற்றும் இராணுவத்தினர்  40 பேர் வரை ஈடுபட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம்  தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் மருதங்கேணி போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் உரிய சட்ட நடவடிக்கைகளாக நடவடிக்கைக்கு முற்படுத்தப்படவுள்ளனர்.


மேலும் புதுக்குடியிருப்பு  பகுதியில்  பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நடாத்திய யுக்திய சுற்றிவளைப்பில் பல குற்றங்களுடன் தொடர்புபட்ட 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று காலை 5.00 மணி தொடக்கம் ஆறு மணி வரை நடாத்தப்பட்ட  சுற்றிவளைப்பில்,

திறந்த பிடியாணை நபர்கள் இருவரையும், பொலிஸாரினால் ஒருநாள் பிணையில் விடுவிக்கப்பட்ட 3 நபர்களும், 43 லீற்றர் கசிப்பும், திருகோணமலையை சேர்ந்த பல குற்றங்களுடன் தொடர்புடைய  சந்தேக நபர்கள் இருவருமாக எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றிவளைப்பில் கைது செய்த சந்தேகநபர்களை இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தபட இருப்பதும் குறிப்பிடதக்கது.


தமிழர் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை - பலர் கைது. யாழ்ப்பாணம் - வடவராட்சி கிழக்கு குடத்தனை  பகுதியில் இன்று அதிகாலையிலிருந்து மருதங்கேணி  போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் மருதங்கேணி போலீசார் மற்றும் இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட அனைவரும் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் என்றும் குறிப்பாக வாள் வெட்டில் ஈடுபடுதல், மக்களை மிரட்டுதல், சட்டவிரோத கசிப்பு உற்பத்தி  விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் என்றும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த சுற்றிவளைப்பு  நடவடிக்கையில் போலீஸ் மற்றும் இராணுவத்தினர்  40 பேர் வரை ஈடுபட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களிடம்  தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் மருதங்கேணி போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் உரிய சட்ட நடவடிக்கைகளாக நடவடிக்கைக்கு முற்படுத்தப்படவுள்ளனர்.மேலும் புதுக்குடியிருப்பு  பகுதியில்  பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நடாத்திய யுக்திய சுற்றிவளைப்பில் பல குற்றங்களுடன் தொடர்புபட்ட 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது.இன்று காலை 5.00 மணி தொடக்கம் ஆறு மணி வரை நடாத்தப்பட்ட  சுற்றிவளைப்பில்,திறந்த பிடியாணை நபர்கள் இருவரையும், பொலிஸாரினால் ஒருநாள் பிணையில் விடுவிக்கப்பட்ட 3 நபர்களும், 43 லீற்றர் கசிப்பும், திருகோணமலையை சேர்ந்த பல குற்றங்களுடன் தொடர்புடைய  சந்தேக நபர்கள் இருவருமாக எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சுற்றிவளைப்பில் கைது செய்த சந்தேகநபர்களை இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தபட இருப்பதும் குறிப்பிடதக்கது.

Advertisement

Advertisement

Advertisement