வடகிழக்கு யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும்
கடத்தப்பட்டோர்களின் உறவுகளுக்கான விசாரணை தம்பலகாமம் பிரதேச செயலக
கேட்போர் கூடத்தில் இன்று (03) இடம் பெற்றது.
தம்பலகாமம்
பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற இவ் விசாரனையில்
தம்பலகாமம்,கிண்ணியா,திருகோணமலை பட்டினமும் சூழலும்,மொறவெவ ஆகிய பிரதேச
செயலகப் பகுதிகளை சேர்ந்த காணாமல் போனவர்களின் உறவினர்கள் காணாமல்
ஆக்கப்பட்ட அலுவலக ஆணைக்குழு முன்னிலையில் வாக்கு மூலம் அளித்தனர்.
காணாமல் ஆக்கப்பட்ட வர்களின் உறவுகள் தங்களது வாக்கு மூலங்களை
அளித்ததுடன் ஆணைக்குழுவினர் வாக்கு மூலத்தை பதிவு செய்தனர்.
இதில் காணாமல்
ஆக்கப்பட்ட அலுவலக ஆணையாளர் மற்றும் அதன் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக
உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.