சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கடந்த சில நாட்களாக உணவகங்கள் மற்றும் பலசரக்கு விற்பனை நிலையங்களில் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த சில நாட்களாக அராலி பிரிவு பொது சுகாதார பரிசோதகர், மூளாய் பிரிவு பொது சுகாதார பரிசோதகர்கள், தங்கள் பிரிவுகளில் திடீர் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்போது திகதி காலாவதியான உணவு பொருட்கள், பழுதடைந்த உணவு பொருட்கள், உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத உணவகங்கள் என 6 உணவகங்கள், பலசரக்கு விற்பனை நிலையங்கள் சிக்கிக் கொண்டன.
மேற்படி 6 உணவு கையாளும் நிலைய உரிமையாளர்களிற்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்களால் நேற்றையதினம்(04) மல்லாகம் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
நேற்றையதினமே வழக்குகளை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிமன்றம், உணவக உரிமையாளர்களிற்கு 90,000/= தண்டம் விதித்ததுடன் கடுமையான எச்சரிக்கையும் விடுத்தது.
அத்துடன் ஒருஉணவகமும் சீல்வைத்து மூடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்கள். பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் எடுத்த நடவடிக்கை. சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கடந்த சில நாட்களாக உணவகங்கள் மற்றும் பலசரக்கு விற்பனை நிலையங்களில் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கடந்த சில நாட்களாக அராலி பிரிவு பொது சுகாதார பரிசோதகர், மூளாய் பிரிவு பொது சுகாதார பரிசோதகர்கள், தங்கள் பிரிவுகளில் திடீர் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.இதன்போது திகதி காலாவதியான உணவு பொருட்கள், பழுதடைந்த உணவு பொருட்கள், உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத உணவகங்கள் என 6 உணவகங்கள், பலசரக்கு விற்பனை நிலையங்கள் சிக்கிக் கொண்டன.மேற்படி 6 உணவு கையாளும் நிலைய உரிமையாளர்களிற்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்களால் நேற்றையதினம்(04) மல்லாகம் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.நேற்றையதினமே வழக்குகளை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிமன்றம், உணவக உரிமையாளர்களிற்கு 90,000/= தண்டம் விதித்ததுடன் கடுமையான எச்சரிக்கையும் விடுத்தது.அத்துடன் ஒருஉணவகமும் சீல்வைத்து மூடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.