• May 17 2024

யுக்ரைனுக்கு எதிராக மீண்டும் பாரிய தாக்குதல்களை ஆரம்பித்த ரஷ்யா!

Tamil nila / Dec 16th 2022, 6:27 pm
image

Advertisement

யுக்ரைனுக்கு எதிராக ரஷ்ய இராணுவம் மீண்டும் பாரிய தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தலைநகர் கிவ் உட்பட பல பகுதிகளில் ஏவுகணை மற்றும் ஆளில்லா வாநூர்தி தாக்குதல்களை ரஷ்யா இன்று ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

யுக்ரைனிய மக்கள் செறிந்து வாழும் பல நகரங்களும் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன.

மிக்கோலைவ் நகரத்தில் மாத்திரம், இதுவரை 60 ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக நகர முதல்வர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல்கள் இடம்பெறும் பிரதேசங்களின் மின்சார விநியோகம் முற்றாக பாதிப்படைந்துள்ளது.

ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படும் நேரத்தில், பதுங்கு குழிகளில் இருந்து வெளியேற வேண்டாம் என பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுக்ரைனுக்கு எதிராக மீண்டும் பாரிய தாக்குதல்களை ஆரம்பித்த ரஷ்யா யுக்ரைனுக்கு எதிராக ரஷ்ய இராணுவம் மீண்டும் பாரிய தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.தலைநகர் கிவ் உட்பட பல பகுதிகளில் ஏவுகணை மற்றும் ஆளில்லா வாநூர்தி தாக்குதல்களை ரஷ்யா இன்று ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.யுக்ரைனிய மக்கள் செறிந்து வாழும் பல நகரங்களும் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன.மிக்கோலைவ் நகரத்தில் மாத்திரம், இதுவரை 60 ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக நகர முதல்வர் தெரிவித்துள்ளார்.தாக்குதல்கள் இடம்பெறும் பிரதேசங்களின் மின்சார விநியோகம் முற்றாக பாதிப்படைந்துள்ளது.ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படும் நேரத்தில், பதுங்கு குழிகளில் இருந்து வெளியேற வேண்டாம் என பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement