மால்டோவாவிற்கு ரஷ்யா எந்த அளவிற்கு அழுத்தம் கொடுக்கிறது என்பதை ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டமைப்பு அறிந்திருப்பதாக ஜோசப் பொரெல் தெரிவித்துள்ளார்.
பிரஸ்ஸல்ஸில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், ஆண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய அரசியல் சமூக மாநாட்டை மால்டோவா நடத்தவுள்ளது. இது மால்டோவாவிற்கு ஆதரவை வழங்க ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்துள்ளது எனத் தெரிவித்தார்;.
அதேநேரம் மால்டோவா குடியரசை சீர்குலைக்கம் ரஷ்ய கூட்டமைப்பின் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி செலன்ஸ்கியின் அறிக்கைகள் எங்கள் நிறுவனங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும் மால்டோவாவை ஆக்கிரமிப்பதற்கு இராணுவ வீரர்களை மால்டோவா குடிமக்கள் போல் வேடமிட்டு நாசகார வேலைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மால்டோவில் நாசகார வேலைகளை முன்னெடுக்கும் ரஷ்யா : ஜோசப் பொரெல் வெளியிட்ட தகவல் SamugamMedia மால்டோவாவிற்கு ரஷ்யா எந்த அளவிற்கு அழுத்தம் கொடுக்கிறது என்பதை ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டமைப்பு அறிந்திருப்பதாக ஜோசப் பொரெல் தெரிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர், ஆண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய அரசியல் சமூக மாநாட்டை மால்டோவா நடத்தவுள்ளது. இது மால்டோவாவிற்கு ஆதரவை வழங்க ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்துள்ளது எனத் தெரிவித்தார்;.அதேநேரம் மால்டோவா குடியரசை சீர்குலைக்கம் ரஷ்ய கூட்டமைப்பின் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி செலன்ஸ்கியின் அறிக்கைகள் எங்கள் நிறுவனங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் மால்டோவாவை ஆக்கிரமிப்பதற்கு இராணுவ வீரர்களை மால்டோவா குடிமக்கள் போல் வேடமிட்டு நாசகார வேலைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.