• Sep 20 2024

உக்ரைனின் ஏவுகணை தாக்குதலில் ரஷ்ய இராணுவத்திற்கு பேரிழப்பு!

Tamil nila / Jan 3rd 2023, 6:23 am
image

Advertisement

உக்ரைன் நடத்திய ரொக்கெட் தாக்குதலில் 63 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாக ரஷ்யா அறிவித்துள்ள நிலையில் இந்த தாக்குதலில் 400 ற்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.


ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் டோனெட்க்ஸ் மாகாணத்தில் உள்ள மெகிவ்கா நகரில் ரஷ்ய வீரர்களின் தற்காலிக இராணுவ தளத்தில் உக்ரைன் இராணுவம் தாக்குதல் நடத்தியது.


ஹிம்ரஸ் ரொக்கெட் ஏவு அமைப்பில் இருந்து ஏவப்பட்ட இந்த ரொக்கெட் தாக்குதலில் 63 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்தனர். ஹிம்ரஸ் ரொக்கெட் ஏவு அமைப்பில் இருந்து 6 ரொக்கெட்டுகள் ஏவப்பட்டதாகவும், அதில் 2 சுட்டுவீழ்த்தப்பட்டதாகவும் ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது.



அதேவேளை, மெகிவ்கா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 400 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாகவும், 300 வீரர்கள் படுகாயமடைந்ததாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.


அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்ட ஹிம்ரஸ் ரொக்கெட் ஏவு அமைப்பு மூலம் உக்ரைன் இந்த ரொக்கெட் தாக்குதலை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.  


உக்ரைனின் ஏவுகணை தாக்குதலில் ரஷ்ய இராணுவத்திற்கு பேரிழப்பு உக்ரைன் நடத்திய ரொக்கெட் தாக்குதலில் 63 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாக ரஷ்யா அறிவித்துள்ள நிலையில் இந்த தாக்குதலில் 400 ற்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் டோனெட்க்ஸ் மாகாணத்தில் உள்ள மெகிவ்கா நகரில் ரஷ்ய வீரர்களின் தற்காலிக இராணுவ தளத்தில் உக்ரைன் இராணுவம் தாக்குதல் நடத்தியது.ஹிம்ரஸ் ரொக்கெட் ஏவு அமைப்பில் இருந்து ஏவப்பட்ட இந்த ரொக்கெட் தாக்குதலில் 63 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்தனர். ஹிம்ரஸ் ரொக்கெட் ஏவு அமைப்பில் இருந்து 6 ரொக்கெட்டுகள் ஏவப்பட்டதாகவும், அதில் 2 சுட்டுவீழ்த்தப்பட்டதாகவும் ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது.அதேவேளை, மெகிவ்கா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 400 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாகவும், 300 வீரர்கள் படுகாயமடைந்ததாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்ட ஹிம்ரஸ் ரொக்கெட் ஏவு அமைப்பு மூலம் உக்ரைன் இந்த ரொக்கெட் தாக்குதலை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement