• May 20 2024

விரைவில் பாரிய கூட்டணிக்குச் சஜித் தயார்! samugammedia

Tamil nila / Aug 8th 2023, 8:17 am
image

Advertisement

மொட்டுவில் அதிருப்தியடைந்த எம்.பிக்களையும் இணைத்துக்கொண்டு விரைவில் பாரிய கூட்டணி ஒன்றை அமைப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பில் தெற்கு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்,

ஒரு சில நாட்களுக்கு முன் மொட்டுக் கட்சியின் முக்கிய எம்.பி. ஒருவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு தொலைபேசி அழைப்பு எடுத்துள்ளார்.

அவ்வாறு அவர் தொலைபேசி அழைப்பு எடுத்ததன் நோக்கம் அவருடன் சேர்ந்து 15 எம்.பிக்கள் அரசுடன் அதிருப்தியடைந்திருப்பதாகவும், எதிர்க்கட்சியில் இணைவதற்குத் தயாராக இருப்பதாகவும் சஜித்திடம் தகவல் சொல்வதற்கே.

"சேர்... உங்களது கட்சியில் இணைய முடியுமா...? என்று சஜித்திடம் அவர் கேட்டுள்ளார்.

"முடியும். விரைவில் பாரிய கூட்டணி ஒன்றை அமைக்கப் போகின்றோம். அதில் இணையுங்கள். ஏற்கனவே மொட்டில் இருந்து விலகிய 13 எம்பிக்கள் சுயாதீனமாக இயங்குவதோடு எம்மோடும் சேர்ந்து செயற்படுகின்றார்கள். அவ்வாறு நீங்களும் செயற்பட முடியும்" - என்று சஜித் பதிலளித்துள்ளார்.

விரைவில் பாரிய கூட்டணிக்குச் சஜித் தயார் samugammedia மொட்டுவில் அதிருப்தியடைந்த எம்.பிக்களையும் இணைத்துக்கொண்டு விரைவில் பாரிய கூட்டணி ஒன்றை அமைப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தீர்மானித்துள்ளார்.இது தொடர்பில் தெற்கு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்,ஒரு சில நாட்களுக்கு முன் மொட்டுக் கட்சியின் முக்கிய எம்.பி. ஒருவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு தொலைபேசி அழைப்பு எடுத்துள்ளார்.அவ்வாறு அவர் தொலைபேசி அழைப்பு எடுத்ததன் நோக்கம் அவருடன் சேர்ந்து 15 எம்.பிக்கள் அரசுடன் அதிருப்தியடைந்திருப்பதாகவும், எதிர்க்கட்சியில் இணைவதற்குத் தயாராக இருப்பதாகவும் சஜித்திடம் தகவல் சொல்வதற்கே."சேர். உங்களது கட்சியில் இணைய முடியுமா. என்று சஜித்திடம் அவர் கேட்டுள்ளார்."முடியும். விரைவில் பாரிய கூட்டணி ஒன்றை அமைக்கப் போகின்றோம். அதில் இணையுங்கள். ஏற்கனவே மொட்டில் இருந்து விலகிய 13 எம்பிக்கள் சுயாதீனமாக இயங்குவதோடு எம்மோடும் சேர்ந்து செயற்படுகின்றார்கள். அவ்வாறு நீங்களும் செயற்பட முடியும்" - என்று சஜித் பதிலளித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement