• Sep 19 2024

ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான மக்கள் கருத்து கணிப்பில் சஜித் முன்னிலை..!

Sharmi / Aug 3rd 2024, 6:57 pm
image

Advertisement

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவின் மக்கள் கருத்து 04 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சுகாதாரக் கொள்கை நிறுவனம் வெளியிட்டுள்ள ஜூன் மாதம் தொடர்பான கணக்கெடுப்பு அறிக்கையிலிருந்து இது தெரியவந்துள்ளது.

அந்தவகையில், சஜித் பிரேமதாசவுக்கு 43 வீதமான மக்கள் கருத்து உள்ளது.

அதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் மக்களின் அங்கீகாரம் 6 வீதத்தால் குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அதன்படி அவர் பெற்ற வாக்குகள் 30 சதவீதமாகும்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொதுக் கருத்து மூன்று வீதத்தால் அதிகரித்துள்ள நிலையில் அது 20 வீதமாகும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் மீதான மக்களின் எண்ணம் ஒரு வீதத்தால் குறைந்துள்ளதுடன் அதன் புதிய எண்ணிக்கை 07  வீதமாக  காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான மக்கள் கருத்து கணிப்பில் சஜித் முன்னிலை. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவின் மக்கள் கருத்து 04 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.சுகாதாரக் கொள்கை நிறுவனம் வெளியிட்டுள்ள ஜூன் மாதம் தொடர்பான கணக்கெடுப்பு அறிக்கையிலிருந்து இது தெரியவந்துள்ளது.அந்தவகையில், சஜித் பிரேமதாசவுக்கு 43 வீதமான மக்கள் கருத்து உள்ளது.அதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் மக்களின் அங்கீகாரம் 6 வீதத்தால் குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.அதன்படி அவர் பெற்ற வாக்குகள் 30 சதவீதமாகும்.தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொதுக் கருத்து மூன்று வீதத்தால் அதிகரித்துள்ள நிலையில் அது 20 வீதமாகும்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் மீதான மக்களின் எண்ணம் ஒரு வீதத்தால் குறைந்துள்ளதுடன் அதன் புதிய எண்ணிக்கை 07  வீதமாக  காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement