• May 08 2024

போதைப் பொருள் பாவனைக்கு இலக்கு வைக்கப்படும் பாடசாலை மாணவர்கள்..!ஆசிரியர்களை எதிரிகளாகப் பார்க்காதீர்கள்..! நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா வேண்டுகோள்..!samugammedia

Sharmi / Aug 18th 2023, 12:47 pm
image

Advertisement

ஆசிரியர்கள், அதிபர்கள் மாணவர்களை நோக்கி காழ்ப்புணர்வு கொண்ட வன்முறைகளை ஒரு போதும் பிரயோகிப்பதில்லை. அதனால் ஆசிரியர்களை மதிக்கின்ற நிலைமையை மாணவர்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டுமென நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா தெரிவித்தார்.

அக்கரைப்பற்று வலய, ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய "மாணவர்களுக்கான விசேட வழிகாட்டல் நிகழ்வு" நேற்று (17) பாடசாலையின் அதிபர் அஷ்ஷெய்க் யு.கே.அப்துர் ரஹீம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பாடசாலை சமூகத்தின் அழைப்பின் பேரில் அக்கரைப்பற்று மாவட்ட மற்றும் நீதிவான் நீதிமன்றத்தின் நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், ஞாபகார்த்தமாக, பாடசாலையில் மரக்கன்றுகளும் நீதிபதியினால் நடப்பட்டது.

இந்நிகழ்வில், பாடசாலையின் பிரதி அதிபர் எம்.ஏ.கமறுந் நிஸா, உதவி அதிபர்களான எம்.எச்.மஹ்மூத் நஸீம், கே.எல்.எம்.சமீன், ஏ.ஜே.எம்.றினீஸ் ஆகியோருடன் வலயத்தலைவர்கள், பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்தும் நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா உரையாற்றும் போது,

மாணவச் செல்வங்கள் என்று விழிப்பதற்கு காரணம் மாணவர்கள் செல்வங்களாகும். நாட்டின் சொத்துக்கள் இந்த மாணவச் செல்வங்களாகும். இவர்கள் தொடர்பாக நான் அடிக்கடி கவலை கொள்கின்ற சில சந்தர்ப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

போதைப்பொருள் தொடர்பாக மாணவர்களாகிய உங்களுக்கு மத்தியில் சில விடயங்களை முன் வைக்கலாமென நினைக்கிறேன்.

வெவ்வேறுபட்ட நபர்களை வளவாளர்களாகக் கொண்டு இவ்விடயங்களைக் கூறினாலும் நேரடியாக ஒரு நீதிபதி கூறுவது சாலப் பொருத்தமாக இருக்குமென நினைக்கின்றேன்.

போதைப் பொருள் பாவனை சாதாரணமான விடயமல்ல. மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும். இதனை உங்களிடம் நான் ஏன் கூறுகின்றேன் என்றால், இதனை நீங்கள் செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்பதற்காக அல்ல. தற்பொழுது நீங்களே இலக்கு வைக்கப்பட்ட குழுக்களாக இருந்து கொண்டிக்கின்றீர்கள். அதனால் என்றைக்கோ ஒரு நாள் நீங்களும் இச்சிக்கலுக்குள் மாட்டிக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் மிகவும் அதிகமாக இருந்து கொண்டிருக்கின்றன என்ற உண்மையை நான் கூறி வைக்கின்றேன்.

உங்களுடைய வயது ஆலோசனை கூறுபவர்களை எதிரியாகப் பார்க்கின்ற ஒரு வயதாகும். அதனால் சில சந்தர்ப்பங்களில் சில மாணவர்கள் ஆசிரியர்களை எதிரிகளாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள்.

நீதிபதியாக உங்கள் முன் பேசிக்கொண்டிருக்கின்ற நான், தற்பொழுது எனது மாணவப்பருவத்தை எண்ணிப் பார்க்கின்றேன். சுவாரசியமாக துள்ளித்திரிந்து விளையாடிய அக்காலத்தை மீட்டுக்கொள்கின்றேன்.

இன்று நிலைமை வேறாக இருக்கின்றது. ஆசிரியர்களை மதிக்காத, ஆசிரியர்களை தாக்குகின்றளவுக்கு பிற்போக்கான நிலைமை உருவாகி இருக்கின்றது. இது ஆரோக்கிய சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அம்சமாகக் கொள்ள முடியாது.

இவ்வாறு ஆசிரியர்கள் தாக்கப்படுவதும் பல்வேறு வகையான துன்பங்களுக்கு ஆளாக்கப்படுகின்ற நிலைமைகளையும் நாளாந்தம் எம்மால் காணக்கூடியதாகவுள்ளது. இதற்கு முக்கிய காரணம் நாங்களாகவே உருவாக்கிய சூழ்நிலைகளேயாகும்.

எனவே தான், அன்புக்குரிய மாணவர்களே, நீங்கள் ஆசிரியர்களுக்கு மதிப்பளித்து ஒழுக்க விழுமியங்களில் மேலோங்கி நடப்பீர்களேயானால், உங்களது சிறப்பான இலட்சியங்களை இலகுவாக அடைந்து கொள்ள முடியுமென்ற விடயத்தை எனது சொந்த அனுபவத்திலிருந்து சுட்டிக்காட்டுகின்றேன் என்றும் கூறினார்.


போதைப் பொருள் பாவனைக்கு இலக்கு வைக்கப்படும் பாடசாலை மாணவர்கள்.ஆசிரியர்களை எதிரிகளாகப் பார்க்காதீர்கள். நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா வேண்டுகோள்.samugammedia ஆசிரியர்கள், அதிபர்கள் மாணவர்களை நோக்கி காழ்ப்புணர்வு கொண்ட வன்முறைகளை ஒரு போதும் பிரயோகிப்பதில்லை. அதனால் ஆசிரியர்களை மதிக்கின்ற நிலைமையை மாணவர்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டுமென நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா தெரிவித்தார்.அக்கரைப்பற்று வலய, ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய "மாணவர்களுக்கான விசேட வழிகாட்டல் நிகழ்வு" நேற்று (17) பாடசாலையின் அதிபர் அஷ்ஷெய்க் யு.கே.அப்துர் ரஹீம் தலைமையில் இடம்பெற்றது.இந்நிகழ்வுக்கு பாடசாலை சமூகத்தின் அழைப்பின் பேரில் அக்கரைப்பற்று மாவட்ட மற்றும் நீதிவான் நீதிமன்றத்தின் நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், ஞாபகார்த்தமாக, பாடசாலையில் மரக்கன்றுகளும் நீதிபதியினால் நடப்பட்டது.இந்நிகழ்வில், பாடசாலையின் பிரதி அதிபர் எம்.ஏ.கமறுந் நிஸா, உதவி அதிபர்களான எம்.எச்.மஹ்மூத் நஸீம், கே.எல்.எம்.சமீன், ஏ.ஜே.எம்.றினீஸ் ஆகியோருடன் வலயத்தலைவர்கள், பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.தொடர்ந்தும் நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா உரையாற்றும் போது,மாணவச் செல்வங்கள் என்று விழிப்பதற்கு காரணம் மாணவர்கள் செல்வங்களாகும். நாட்டின் சொத்துக்கள் இந்த மாணவச் செல்வங்களாகும். இவர்கள் தொடர்பாக நான் அடிக்கடி கவலை கொள்கின்ற சில சந்தர்ப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன.போதைப்பொருள் தொடர்பாக மாணவர்களாகிய உங்களுக்கு மத்தியில் சில விடயங்களை முன் வைக்கலாமென நினைக்கிறேன்.வெவ்வேறுபட்ட நபர்களை வளவாளர்களாகக் கொண்டு இவ்விடயங்களைக் கூறினாலும் நேரடியாக ஒரு நீதிபதி கூறுவது சாலப் பொருத்தமாக இருக்குமென நினைக்கின்றேன்.போதைப் பொருள் பாவனை சாதாரணமான விடயமல்ல. மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும். இதனை உங்களிடம் நான் ஏன் கூறுகின்றேன் என்றால், இதனை நீங்கள் செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்பதற்காக அல்ல. தற்பொழுது நீங்களே இலக்கு வைக்கப்பட்ட குழுக்களாக இருந்து கொண்டிக்கின்றீர்கள். அதனால் என்றைக்கோ ஒரு நாள் நீங்களும் இச்சிக்கலுக்குள் மாட்டிக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் மிகவும் அதிகமாக இருந்து கொண்டிருக்கின்றன என்ற உண்மையை நான் கூறி வைக்கின்றேன்.உங்களுடைய வயது ஆலோசனை கூறுபவர்களை எதிரியாகப் பார்க்கின்ற ஒரு வயதாகும். அதனால் சில சந்தர்ப்பங்களில் சில மாணவர்கள் ஆசிரியர்களை எதிரிகளாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள்.நீதிபதியாக உங்கள் முன் பேசிக்கொண்டிருக்கின்ற நான், தற்பொழுது எனது மாணவப்பருவத்தை எண்ணிப் பார்க்கின்றேன். சுவாரசியமாக துள்ளித்திரிந்து விளையாடிய அக்காலத்தை மீட்டுக்கொள்கின்றேன்.இன்று நிலைமை வேறாக இருக்கின்றது. ஆசிரியர்களை மதிக்காத, ஆசிரியர்களை தாக்குகின்றளவுக்கு பிற்போக்கான நிலைமை உருவாகி இருக்கின்றது. இது ஆரோக்கிய சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அம்சமாகக் கொள்ள முடியாது.இவ்வாறு ஆசிரியர்கள் தாக்கப்படுவதும் பல்வேறு வகையான துன்பங்களுக்கு ஆளாக்கப்படுகின்ற நிலைமைகளையும் நாளாந்தம் எம்மால் காணக்கூடியதாகவுள்ளது. இதற்கு முக்கிய காரணம் நாங்களாகவே உருவாக்கிய சூழ்நிலைகளேயாகும்.எனவே தான், அன்புக்குரிய மாணவர்களே, நீங்கள் ஆசிரியர்களுக்கு மதிப்பளித்து ஒழுக்க விழுமியங்களில் மேலோங்கி நடப்பீர்களேயானால், உங்களது சிறப்பான இலட்சியங்களை இலகுவாக அடைந்து கொள்ள முடியுமென்ற விடயத்தை எனது சொந்த அனுபவத்திலிருந்து சுட்டிக்காட்டுகின்றேன் என்றும் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement